பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ខ្ទឹ தமிழ் நூல் தொகுப்புக் க.ை --. &ടേമ கிடைத்திருப்பின் செய்யுட்கள் இருந்ததாக இல்லாம் என்னும் கருத்தில், பேராசிரியர் தொல்காப்பியச் செய்யுளிடில் உரையில் பல்வேறிடங்களில் தெரிவித்துள்ள, "...இலக்கணம் உண்மையின் இலக்கியம் காணுமாயினும் அமையும் (183) - இவற்றுக்கு உதாரணம் காளுமையின் காட்ட மாயினும், இலக்கணம் உண்மையின் அமையும் என்பது' 'இலக்கணம் உண்மையின் இலக்கியம் பெற்ற: வழிக் கண்டு கொள்க: இப்பொழுது அவை வீழ்ந்தன போலும் : 'நூற்றைம்பது கலியுள்ளும் கைக்கிளை பற்றி இவ்வாறு வரும் கலிவெண்பாட்டுக் காளுமையின் காட்டாமாயினும்; இலக்கணம் உண்மையின் இலக்கியம் பெற்றவழிக் கண்டு கொள்க (160).”... என்னும் உரைப் பகுதிகளும் இன்ன பிறவும் ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கன. எனவே, தலைச்சங்கத்தில் தமிழ் ஆராய்ந்த புலவர்கள் பலர் இயற்றிய பரிபாடல்கள் பலவற்றின் தொகுப்பு நூலே, இறையனர் அகப்பொருள் உரையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிபாடல் என்பது தெளிவு கலிப் பாக்களின் தொகுப்பாகிய கலித்தொகையைப் போலவே, பரிபாடல் தொகை நூலும் பாவகையால் பெயர் பெற்ற தாகும். , தலேச்சங்கம் இற்றைக்கு 11,790ஆண்டுக்கு முன் தோன்றி 4,440ஆண்டுகள் நடைபெற்றதாக இறையஞர் அகப் பொருள் உரையால் அறிந்தோம். எனவே, தலைச்சங்கத்தைச் சேர்ந்ததாகக் கூறப்பட்டுள்ள இந்தப் பரிபாடல் நூல், இற்றைக்கு ஏறக்குறையப் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இயற்றப் பட்டிருக்கவேண்டும் என்பதும் அறியப்படும். இதில் நம்பிக்கையில்லாமல் எவ்வளவு குறைத்துப் பார்க்கினும், இற்றைக்கு ஐயாயிரம் ஆண்டுக்கு முன் பாவது தலைச் சங்கத்துப் பரிபாடல் தொகை நூல் இயற்றப்பட்டிருக்கலாம். சுருங்கக் கூறின், தொல்காப்பியத்திற்கு முன்பே தமிழில் பரிபாடல் என்னும் தொகைநூல் இருந்தது என்பது தெளிவு. ஆகவே, நாம் முன் தலைப்பில் கண்ட உலகமொழித் தொகை. தொல்காப்பியத்துக்கு முன் #09 ஆால்களைவிட, இந்தப் பெரும் பரிபாடல் தொகை நூல் மிகவும் முற்பட்ட்து என்பது உறுதி. 2. 3 முது காரை, முது குருகு இறையனர் அகப்பொருள் உரையில் பரிபாடலுக்கு அடுத்தபடியாகக் குறிப்பிடப்பட்டுள்ள முதுநாரை, முது குருகு என்னும் இரு நூல்களும் புரியாத புதிராக உள்ளன. நாரையும் குரு கும் ஓரினத்தவை, - அஃதாவது, - கொக் கினத்தைச் சேர்ந்த பறவைகள். ஆனுல் இரண்டும் ஒன்றல்ல. ஒற்றுமையுடைய இவற்றுக் கிடையே வேறு பாடுகள் உண்டு. இதனை, யாப்பருங்கல (உறுப்பியல் - 9, 10) விருத்தியுரையில் மேற்கோளாக எடுத்துக்காட்டப் பெற்றுள்ள - நூல் பெயர் தெரியாத, ' குருகு காரையொடு கொட்பான விரிதிரை நீர் வியன் கழனி..." என்னும் பாடல் பகுதியில் தனித்தனியாய்க் கூறப்பட்டிருப் பதகுலும் அறியலாம். மத்தும், ஐ வ்கு று நூற்றில் - நெய்தல் பகுதியில் - வெள்ளாங் குருகுப் பத்தில் உள்ள, ' வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக் கானிய சென்ற மடகடை நாரை ...' என்னும் பாடற்பகுதி ஈண்டு எண்ணத்தக்கது. குருகின் குஞ்சைத் தன் குஞ்சு எனக் கருதி நாரை பார்க்கச் சென்ற தாக இப் பகுதியில் கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து. நாரையும் குருகும் ஒற்றுமைக்கிடையே வேற்றுமையுடைய பறவைகள் என்பது புலகுைம். -. இந்தப் பறவைப் பெயர்களால் - அதிலும் முது" என்னும் அடைமொழி சேர்த்து, 'முது நாரை, முது குருகு" என்னும் பெயர்களால் இயற்றப்பட்ட நூல்கள் எப்பொருள் பற்றியனவாய் இருக்கலாம்? மற்றும், இவையிரண்டும், தனி முழு நூல்களாக இருக்குமா? அல்லது, பல உதிரிப் பாடல் களின் தொகுப்பு நூல்களாக இருக்குமா?