பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல் தொகுப்" க3ன் நூலாக இரு' e سسا ra, Grap;5t"-". தமிழ் 110 - )ري جrrالازق - *++ f) ... -- * பெரும்பா9' یا au آلة "இ"ை)ாருள் பற்றி . இவ்வா をェautp யாது. ஒே ó至5示5-G°′丁*、 Loy争° Guptዱ o வே இரு ت • لاهة رأة 5 ايس جيمr قة) لهقة - يp6ي لهraذrgEDلtP * દ્ર :ளகம் ઠં கோழி, Jo! مسلسلام 孟了@ & பொருளு' 2 தால்காப்பியத்துக்கு முன் 11 jo சிறுநணி வரைந்தனை கொண்மோ பெருநீர் வலைவர் தந்த கொழுமீன் வல்சிப் பறைதபு முதுகுருகு இருக்கும் துறைகெழு தொண்டி யன்ன இவள் நலனே (180) என்னும் பாடலில் உள்ளமை காண்க. எனவே, முது நாரை. முது குருகு என்னும் இரட்டைப் பெயர்களேக் கொண்டும், இடை ச்சங்க காலத்தும் குருகு என்னும் பெயரில் ஒரு நூல் : இயற்றப்பட்டிருப்பதைக் கொண்டும், நாரை அல்லது குருகு என்னும் பெயரால் நூல் இயற்றும் வழக்கம் பண்டு இருந்தது என்னும் கருத்து உணரக் கிடக்கிறது. அடுத்து, இந்த நூல்கள் எப்பொருள் பற்றியனவா யிருக்கலாம் எனக் காண வேண்டும். ஆராய்ச்சியாளரின் எண்ணத்திற்கு (சிந்தனைக்கு) ஈண்டு இரண்டு கருத்துக்களைத். தருவோம். ஒன்று: அகநானுாற்றில் குறிப்பிட்ட 120 பாடல் களின் தொகுப்புக்குக் களிற்றியான நிரை என்னும் பெயர் தரப்பட்டிருப்பதை ஈண்டு ஒப்பு நோக்க வேண்டும். ஆண் யானைகளின் வரிசை போன்ற அமைப்புடைய பாடல்களின் தொகுப்பு களிற்றியான நிரை’ என வழங்கப் பெறுகிறது. அதுபோலவே, நாரை - குருகின் நீண்டுயாந்த தோற்றம் . போல் நீளமாக உள்ள பாடல்கள் நாரை - குருகு என்னும் பெயரால் வழங்கப்பட்டிருக்கலாம். ஒரளவு நீண்ட இசைப் பாடல்கள் நாரை - குருகு என்னும் பெயராலும், மிகவும். நீண்ட இசைப் பாடல்கள் முது நாரை - முது குருகு என்னும் பெயராலும் வழங்கப்பட்டிருக்கலாம். உலகியலில், மிகவும் உயரமாய் இருக்கிறவரைப் பார்த்து நெட்டைக் கொக்கு என்று கேலி செய்வது ஈண்டு நினைவு கூரத்தக்கது. எனவே, மிகவும் நீண்ட இசைப் பாடல்கள் முது நாரை, முது குருகு என்.லும் பெயர்களால் வழங்கப்பட்டிருக்கலாம் என உய்த். து ணரலாம். * பரிபாடல் என்பது, நானுவாறு அடிகள் வரையும் நீண்டிருக்கும் எனத் தொல்காப்பியம் கூறுவது முன்னரே (பக்கம்-107) அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால்,. பண்டைக் காலத்திலேயே மிகவும் நீளமான பாடல்கள் இயற்றும் மரபு இருந்தது என்பது தெளிவு. ஆகவே, -