பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன்றியுரை

---

பூ மகாமகோபாத்தியாய டாக்டர் ஐயரவர்கள் இயற்றிய தனிப் பாடல்களைக் கொண்ட தமிழ்ப்பா மஞ்சரியின் இரண்டாம் பாகம் இறைவனருளால் இப்பொழுது வெளி வருகிறது. இதன் முதற் பாகத்தை உரிய தலப்புக்களுடனும் குறிப்புரை களுடனும் பதிப்பித்த வாகீசகலாநிதி கி.வா. ஜகந்நாதன் அவர்கள் இப்பாகத்தையும் திறம்பட அமைத்து உதவினர். அவர்கட்கும். இப்பதிப்புச் செலவின் பாதியை அன்புடன் உதவிய இந்திய அரசியல், அறிவியல் பண்பாட்டியல் வளர்ச்சித் துறை அமைச்சர் பெருந்தகையாளர் அவர்கட்கும், - இதன் விரைவில் அச்சிட்டுக் கொடுத்த வ. உ. சி. அச்சகத்தார்க்கும் இந்நூல் நிலயம் தன் மனமார்ந்த கடப்பாட்டைத் தெரிவித்துக் கொள்கின்றது.

நூல் நிலையத்தார்