பக்கம்:தமிழ்ப்புலவர் சரித்திரம்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

26 446. வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (முதற் 4 திக்குளெட் டுக்கயர் அக்கமுற் றுத்திக் கிட்டலற. மைக்கடற் குட்சரந் தைக்கவிட் டோற்கிட மாமதுர - . இக்குமுற் றிக்கணுச் சற்றுவீட் டுத்தெறித் திட்டமுத்தைக் , - கொக்குமொக் கிக்கக்கி விக்குமச் சோலைக் குறுங்குடியே,” 25 (் எட்டெழுத் தைக்கருத் திற்குறித் திட்டுத் தம்பரவுஞ் சிட்டர்கட் குத்திருப் பொற்பதத் தைச்சிறக் கத்தருமவ் வட்டநெட் டைப்பணி மெத்தையத் தற்கிடம் வரரிசப்பொ "குட்டினத் துக்குலந் தத்திமுத் தீனுங் குறுங்குடியே" யென் ற பாடல்களைப் பாடினர். ஒன் றற்கொன்று உயர்விழிவுகளின் றிச் சிறந்து - விளங்குநூஉம் அச்செய்யுட்களை மன்னவன் கேட்டு மகிழ்பூத்து இருவர்க்கு மொப்பச் சன்மானஞ்செய்து பாராட்டி வந்தனன். இஃதிவ்லாறாக, ஒரு நாள் உறையூரின்கட் சோழசாசன் ஒட்டக்கடத்த ரொடும் புகழேந்தியாரொடும் அரசகறுகிற் கானடையாய் உலாவிச்செல்லா நூற்புழி, ஒரு வீட்டுத்தெருத் தெற்றியில் இருதாள்களையும் நீட்டிக்கொண்டு வீற்றிருந்த ஒளவையார் சோழனைக் கண்டதும் ஒரு தாளை மடக்கிக் கொண் டனர். அவவருகிற் போ தரும் புகழேந்திப் புலவரைப் பார்த்தவாவின் மற்றைத் தாளையும் மடக்கிக் கொண்டனர். அதன்பினர் அவர்களை யடுத்துப் போந்த ஒட்டக்கூத்தரைக் கண்டவுடனே அவரைக் கர்வபங்கஞ் செய்வான் கருதி யிருதாள் களை..! மொருங்கே நீட்டினர். இதுகண்ட ஒட்டக்கூத்தர் வெட்கமும் வெகுளியுமுடையராய்த் தமிழ் மூதாட்டியாரை நோக்கி, 'எம்மை இன்ன ணம் அவமதித்தது என் கொலோ?' என்று சரின வ லும், அவர் மன் னன் நாட்டுத் தலைவனாதலின் அவற்கொருதாளையும், மன்னனிற் கற்றோன் சிறப்புடையனாதலிற் பாட்டுத் தலைவராய புகழேந்திப் புலவருக்கு இருதாளை யும் மடக்கினேம். நீயோ, புலமையோ னெனிலும் புல்லியோனாய் வீண் பெருமை பாராட்டுவோனாயினே யாகலின் இருதாளையும் நீட்டிளேம்', என்று கூறி, 'மெய்யாகவே சீபும் புகழேந்திப் புலவர்க்கு இணையாவையேற் சோழனை யும் அவனது நாட்டையும் சிறப்பித்து மதிப்பெயரா மொருசொல்லை யொரு பாடலி னீற்றடி.க்கண் மும்முறை பெய்து பாரதி; நின்னாற்றல் காண்குதும்,'. என்றேவலும், ஒட்டக்கூத்தர், ( வெள்ளத் தடங்காச் சினவாளை வேலிக் கமுகின் மீதேறிக் துள்ளி முகிலைக் கிழித்துமழைத் துளியோ டி.றங்குஞ் சோணாடா" கள்ளக் குறும்பர் குலமறுத்த கண்டா வண்டர் கோபாலா பிள்ளை மதிகண் டிப்பேதை பெரிய மதியு மிழந்தாளே,” 27, என்று, பிள்ளை. தாமெனவும் பேனத ஒளவையாரெனவம் தம்மறிவு கண்டு ஒளவையார் அறிவிழந் தாளெளவும் ஒளவையாரைக் குறிப்பினிகழ்ந்து பாடி னர். அஃதுணர்ந்த ஒளவைப்பார் ஒட்டக்கூத்தரை நோக்கி, ஒட்டா! ஒரு மதிகெட்டாய்! என்று கூறி நகையாடி, உடனே புகழேந்தியாரை நோக்கி “யான் சொற்றங்கு நீர் பாயின்; எனலும், புகழேந்திப் புலவர், :