102
தமிழ்ப் பழமொழிகள்
- (பா-ம்.) நான் ஆவேன்.
ஆர் இட்ட சாபமோ அடி நாளின் தீவினையோ?
ஆர்க்காட்டு நவாபு என்றாலும் அரைக்காசுக்குப் பயன் இல்லை. 2355
ஆர் கடன் ஆனாலும் மாரி கடன் ஆகாது.
ஆர் கடன் நின்றாலும் மாரி கடன் நிற்காது.
ஆர் கடன் பட்டாலும் மாரி கடன் வைக்கக் கூடாது.
- (பா-ம்.) பட்டாலும்.
ஆர் குடியைக் கெடுக்க ஆண்டி வேஷம் போட்டாய்?
ஆர் குத்தினாலும் அரிசி ஆவது ஒன்று. 2360
ஆர் குத்தினாலும் அரிசி ஆனால் சரி.
- (பா-ம்.) ஆகவேண்டும்.
ஆர் கெட்டால் என்ன? ஆர் வாழ்ந்தால் என்ன?
ஆர் சமைத்தாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.
- (பா-ம்.) அடுப்புக் கல்.
ஆர் சுட்டாலும் பணியாரம் ஆகவேண்டும்.
ஆர்த்தார் எல்லாம் போருக்கு உரியவர் அல்லர். 2365
ஆர் புருஷனை ஆர் கல்யாணம் பண்ணிக் கொள்ள முடியும்?
ஆர்மேல் கண்? அனந்திமேல் கண்.
ஆர் வாழ்வு ஆருக்கு நின்றது?
ஆர் வாழ்வுதான் சதம்?
ஆர் வைத்த கொள்ளியோ வீடு பற்றி எரிகிறது. 2370
ஆரக் கழுத்தி அரண்மனைக்கு ஆகாது.
ஆரணியமான அழகாபுரிக்கு ஒரு கோரணியான குரங்கு வந்து தோன்றிற்று.
ஆரம்ப சூரத்தனம்.
- (பா-ம்.) சூரத்வம்.
ஆரல்மேல் பூனை அந்தண்டை பாயுமோ இந்தண்டை பாயுமோ?
ஆராகிலும் படி அளந்து விட்டதா? 2375
- (பா-ம்.) அடி.