தமிழ்ப் பழமொழிகள்
103
ஆராய்ந்து பாராதவன் காரியம் தான் சாந் துயரம் தரும்.
ஆராய்ந்து பாராமுன் தலையிடாதே.
ஆரால் கெட்டான் நோரால் கெட்டான்.
- (நோரு-வாய்: தெலுங்கு.)
ஆரால் கேடு, வாயால் கேடு.
ஆராவது என்னைத் தூக்கி மாத்திரம் பிடிப்பார்களானால் நான் பிணக்காடாக வெட்டுவேன் என்று முடவன் கூறியது போல. 2380
ஆரியக் கூத்தாடினாலும் காரியத்திலே கண்.
ஆருக்கு அழுவேன் அப்பா ஹைதர் அலி.
ஆருக்கு ஆகிலும் துரோகம் செய்தால் ஐந்தாறு நாள் பொறுத்துக் கேட்கும்; ஆத்மத் துரோகம் செய்தால் அப்போதே கேட்கும்.
- (பா-ம்.) பொறுக்கும்.
ஆருக்கு ஆர் சதம், ஆருக்கு என்று அழுவேனடா ஹைதர் அலி?
- (பா-ம்.) ஆடுவேன்.
ஆருக்குப் பிறந்து மோருக்கு அழுகிறாய்? 2385
ஆருக்கும் அஞ்சான், ஆர் படைக்கும் தோலான்.
- (பா-ம்.) பகைக்கும்.
ஆருக்கும் பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்.
ஆருக்கும் மாட்டாதவன் பெண்டுக்கு மாட்டுவான்.
ஆருக்கு வந்ததோ, எவருக்கு வந்ததோ என்று இருக்காதே.
ஆருக்கு வந்த விருந்தோ என்று இருந்தால் விருந்தாளி பசி என்னாவது ? 2390
ஆரும் அகப்படாத தோஷம், மெத்தப் பதிவிரதை.
ஆரும் அற்றதே தாரம்; ஊரில் ஒருத்தனே தோழன்.
ஆரும் அற்றவருக்குத் தெய்வமே துணை.
ஆரும் அறியாத அரிச்சந்திரன் கட்டின தாலி.
ஆரும் அறியாமல் கொண்டு கொடுத்தானாம்; காடு மேடெல்லாம் கரி ஆக்கினானாம். 2395
ஆரும், ஆரும் உறவு? தாயும் பிள்ளையும் உறவு.