110
தமிழ்ப் பழமொழிகள்
ஆளத் தெரியாத அண்ணாக்கள்ளன் ஒரு குழம்பு வைக்கத் தெரியவில்லை என்றானாம்.
ஆள மாட்டாதவனுக்குப் பெண்டாட்டி ஏன்?
- (பெண்டு ஒரு கேடு.)
ஆளவந்தாரும் உடையவரும் சேர்ந்தால் வைகுண்டத்துக்குப் படி கட்டியிருப்பார்கள். 2530
ஆளன் இல்லாத துக்கம் அழுதாலும் தீராது;
- (+சீர் இல்லாக் கல்யாணம் செய்தாலும் நிறக்காது.)
ஆளன் இல்லாத பெண்ணுக்கு வாழ்வு இல்லை.
ஆளன் இல்லாத மங்கைக்கு அழகு பாழ்.
ஆளன் இல்லாதவள் ஆற்று மணலுக்குச் சரி.
ஆளன் உறவு உண்டானால் மாமி மயிர் மாத்திரம். 2535
ஆளனைப் பிரிந்திருத்தல் அரிவையர்க்கு அழகன்று.
ஆளான ஆள் புகுந்தால் ஆமணக்கு விளக்கெண்ணெய் ஆகும்.
ஆளான ஆளுக்கு அவிழ் அகப்படாக் காலத்திலே காக்காய்ப் பிசாசு கஞ்சிக்கு அழுகிறது.
ஆளில் கட்டை அரண்மனைக்கு உதவான்.
ஆளிலும் ஆள் அம்மாப் பேட்டை ஆள். 2540
- (ஆற்றல் உள்ளவன் என்பது பொருள். அம்மாப்பேட்டை தஞ்சை மாவட்டத்தில் உள்ளது.)
ஆளுக்கு ஆள் வித்தியாசம்.
ஆளுக்கு ஒத்த ஆசாரமும் ஊருக்கு ஒத்த உபசாரமும்.
- (+வேண்டாமா?)
ஆளுக்கு ஒரு குட்டு வைத்தால் அடியேன் தலை மொட்டை.
- (ஆண்டியின் தல.)
ஆளுக்கு ஒரு குட்டுக் குட்டினாலும் அவனுக்குப் புத்தி வராது.
ஆளுக்கு ஒரு மயிர் பிடுங்கினால் அடியேன் தலை மொட்டை. 2545
ஆளுக்குக் கீரைத்தண்டு; ஆனைக்கு வாழைத்தண்டு.
ஆளுக்குத் தக்கபடி வேஷம் போடுதல்.
ஆளுக்குத் தகுந்த சொட்டுக் கொடுக்கிறது.
ஆளுக்குத் துக்குணி ஆள் பாரம்.
- (ஆளுக்குச் சற்றே.)
ஆளுக்குள்ளே ஆளாய் இருப்பான். 2550
ஆளும் அம்பும்.
ஆளும் கோளும் படைத்தவனை வேலும் கோலும் என்ன செய்யும்?
ஆளை அடித்தால் அரைப்பணம்.