பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/113

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

111


ஆளை அறிந்து தாண்டுகிறதா?

ஆளை அறிந்துதான் அறுக்கிறான். 2555

ஆளை ஆள் அறிய வேண்டும்; மீனைப் புளியங்காய் அறிய வேண்டும்.

ஆளை ஆள் குத்தும்; ஆள் மிடுக்குப் பத்துப் பேரைக் குத்தும்.

ஆளை ஏய்க்குமாம் நரி: அதனை ஏய்க்குமாம் ஒற்றைக்கால் நண்டு.

ஆளைக் கண்ட சமுத்திரம்.

ஆளைக் கண்டால் ஆறு மணி; ஆளைக் காணா விட்டால் மூன்று மணி. 2560

ஆளைக் கண்டு ஏமாற்றுமாம் ஆலங்காட்டுப் பேய்.

(ஏய்க்குமாம் பிசாசு.)

ஆளைக் கண்டு மலைக்காதே; ஊது காமாலை.

ஆளைச் சுற்றிப் பாராமல் அளக்கிறதா?

ஆளைச் சுற்றிப் பாராமல் அழுகிறாள் ஒரு காலே.

ஆளைச் சேர்த்தாயோ? அடிமையைச் சேர்த்தாயோ? 2565

ஆளை நீட்டிப் போடு.

ஆளைப் பார் சோளக்காட்டிலே.

(சோளக் கொல்லையிலே.)

ஆளைப் பார், சோளக் கொல்லைப் பொம்மை மாதிரி.

ஆளைப் பார்த்தால் அழகுதான்; ஏரில் கட்டினால் குழவுதான்.

ஆளைப் பார்த்தால் அழகுபோல; வேலையைப் பார்த்தால் குழவு போல. 2570

ஆளைப் பார்த்தால் அழகு மலை; வேலையைப் பார்த்தால் குழவு மலை.

ஆளைப் பார்த்தான்; தலையில் அடித்தான்.

ஆளைப் பார்த்தான் வாயால் ஏய்த்தான்.

(பார்த்துத்தான்.)

ஆளைப் பார்த்து ஆசனம் போடுவான்.

ஆளைப் பார்த்துக் கூலி கேட்கிறது; அவனைப் பார்த்துப் பெண்டு கேட்கிறது. 2575

ஆளைப் பார்த்து மலைக்காதே; ஊது கணை.