பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/114

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

தமிழ்ப் பழமொழிகள்


ஆளைப் பார்; முகத்தைப் பார்.

ஆற்றங்கரை மரம் விழும்.

(மரம் போலே.)

ஆற்றங்கரையில் தண்ணீர்; அடுப்பங்கரையில் வெந்நீர்.

ஆற்றப் புழுதி ஈரம் தாங்கும். 2580

ஆற்றாக் குலைப் பொல்லாப்பு அடித்துக் கொள்ளுகிறான்.

ஆற்றித் தூற்றி அம்பலத்திலே வைக்கப் பார்க்கிறான்.

(அம்பலத்திலே கொண்டு வந்தானாம்.)

ஆற்றில் இருந்து அரஹராப் பாடினாலும் சோற்றில் இருக்கிறான் சொக்கப்பன்.

ஆற்றில் கரைத்த புளியும் அங்காடிக்கு இட்ட பதரும் ஆயிற்று.

(போல.)

ஆற்றில் கரைத்த பெருங்காயம் போல். 2585

ஆற்றில் கரைத்த மஞ்சள்.

(அரைத்த மஞ்சள்.)

ஆற்றில் நிறையத் தண்ணீர் போனாலும் அள்ளிக் குடிக்கப் போகிறதா நாய்?

ஆற்றில் நிறையத் தண்ணீர் போனாலும் நாய் நக்கித்தான் குடிக்கும்.

ஆற்றில் பெரு வெள்ளம் நாய்க்கு என்ன? சளப்புத் தண்ணீர்.

ஆற்றிலே ஆயிரம் காணி தானம் பண்ணினாற் போலே. 2590

(ஆற்று மணலிலே ஆயிரம் குழி.)

ஆற்றிலே இறங்கினால் ஐம்பத்தெட்டுத் தொல்லையாம்.

ஆற்றிலே ஊறுகிறது, மணலிலே சுவருகிறது.

ஆற்றிலே ஒரு கால்; சேற்றிலே ஒரு கால்.

ஆற்றிலே கணுக்கால் தண்ணீரிலும் அஞ்சி நடக்க வேண்டும்.

ஆற்றிலே போகிற தண்ணீரை அப்பா குடி, ஐயா குடி. 2595

(அம்மாகுடி, ஆத்தாகுடி.)

ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.

(கொட்டினாலும் கொட்டு.)

ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு; குப்பையிலே போட்டாலும் குறிப்பேட்டில் பதிந்து போடு.

ஆற்றிலே போட்டுக் குளத்திலே தேடுவது போல.

(சுந்தரர் கதை.)