பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/134

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

தமிழ்ப் பழமொழிகள்


ஆனையை நோண்டினால் அது உன்னை நோண்டிவிடும்.

ஆனையைப் படைத்த பகவான் பூனையையும் படைத்திருக்கிறார். 3070

ஆனையைப் பார்க்க ஆயிரம் பேர்.

ஆனையைப் பார்க்க வெள்ளெழுத்தா?

ஆனையைப் பார்த்த கண்ணுக்குக் கரடியைப் பார்ப்பதுபோல் இருந்ததாம்.

ஆனையைப் பார்த்துவிட்டுப் பூனையைப் பார்த்தால் பிடிக்குமா?

ஆனையைப் பிடிக்க ஆனைதான் வேண்டும். 3075

ஆனையைப் பிடிக்க எலிப் பொறியா?

ஆனையைப் பிடித்துக் கட்ட அரை ஞாண் கயிறு போதுமா?

ஆனையைப் பிடிப்பதும் கரகத்தில் அடைப்பதும் அதுவே செல்லப் பிள்ளைக்கு அடையாளம்.

(பானையில் அடைப்பதும்.)

ஆனையைப் பிடிப்பான் ஆண் பிள்ளைச் சிங்கம்; பானையைப் பிடிப்பாள் பத்தினித் தங்கம்.

ஆனையைப் புலவனுக்கும் பூனையைக் குறவனுக்கும் கொடு. 3080

(வித்துவானுக்கும்.)

ஆனையைப் பூனை மறைத்ததாம்.

ஆனையைப் போக்கினவன் குடத்திலே தேடின மாதிரி.

ஆனையைப் போல் சுவர் எழுப்பினால் ஆர் தாண்டுவார்கள்?

ஆனையைப் போல வஞ்சனை; புலியைப் போலப் போர்.

ஆனையை முறுக்கி ஆளச் சாமர்த்தியம் இருந்தாலும் அகமுடையாளை அடக்கி ஆளத் திறமை இல்லாதவன் இருந்தென்ன பிரயோசனம்? 3085

ஆனையை வாங்கலாமா லஞ்சம்?

ஆனையை வாங்கிவிட்டுத் துறட்டுக்கு மன்றாடுகிறான்.

ஆனையை வித்துவானுக்கும் பூனையைக் குறவனுக்கும் கொடு.

ஆனையை விழுங்குவான்; கடைவாயில் ஒட்டிய ஈயைக் கண்டு நடுங்குவான்.

ஆனையை விற்றா பூனைக்கு மருத்துவம் பார்ப்பது? 3090

(வைத்தியம்.)

ஆனையை விற்றுத் துறட்டுக்கு மன்றாடுகிறான்.

ஆனையோடு பிறந்த அலங்காரி, சேனையோடு பிறந்த சிங்காரி.

ஆனை லத்தி ஆனை ஆகுமா?