தமிழ்ப் பழமொழிகள்
145
இரண்டு பெண்டாட்டிக்காரன் பாடு திண்டாட்டம்.
இரண்டு பெண்டாட்டிக்காரன் வீட்டில் நெருப்பு ஏன்?
இரண்டு பெண்டாட்டிக்காரனுக்குக் கொண்டை உண்டோடி?
- (கொண்டை என்ன கொண்டை?)
இரண்டும் இரண்டு அகப்பை; இரண்டும் கழன்ற அகப்பை. 3360
இரண்டும் கெட்டான் பேர்வழி.
இரண்டு வீட்டிலும் கல்யாணம்; இடையே செத்ததாம் நாய்க்குட்டி.
இரண்டு வீட்டு விருந்தாளி கெண்டை புரட்டிச் செத்தான்.
- (கெண்டை ஏறிக் கொட்டானாம். கெண்டை-கெண்டைக்கால்.)
இரத்தினத்தைச் சேர்ந்த இழை போல.
இரந்தவன் சோறு என்றைக்கும் பஞ்சம் இல்லை. 3365
இரந்து உண்டவன் இருந்து உண்ணான்.
இரந்து குடித்தாலும் இருந்து குடி.
இரந்தும் பரந்தவைக்குக் கொடுக்கவேணும்.
- (யாழ்ப்பாண வழக்கு.)
இரந்தும் பருந்துக்கு இடு.
- (கொடு.)
இரந்தோர்க்கு ஈவது உடையார் கடன். 3370
இரப்பவனுக்கு ஈவார் பஞ்சமா?
இரப்பவனுக்கு எங்கும் பஞ்சம் இல்லை.
- (என்றும்.)
இரப்பவனுக்குப் பஞ்சம் என்றைக்கும் இல்லை.
இரப்பவனுக்கு வெறுஞ் சோறு பஞ்சமா?
- (வெண் சோறு.)
இரப்பான் சோற்றுக்கு எப்போதும் பஞ்சம் இல்லை. 3375
இரப்பான் சோற்றுக்கு வெண்சோறு பஞ்சமா?
இரப்பானைப் பிடித்ததாம் பறைப் பருந்து.
- (யாழ்ப்பாண வழக்கு.)
இரவல் உடைமை இசைவாய் இருக்கிறது; என் பிள்ளை ஆணை, நான் கொடுக்கமாட்டேன்.
இரவல் உடைமையும் இல்லாதாள் புடைவையும், அவிசாரி அக முடையானும் ஆபத்துக்கு உதவா.
இரவல் கொடாதவை இருந்தாளமாட்டினம். 3380
- (யாழ்ப்பாண வழக்கு.)