146
தமிழ்ப் பழமொழிகள்
இரவல் சதம் ஆகுமா? மதனி உறவு ஆகுமா?
இரவல் சதமா? திருடன் உறவா?
இரவல் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறிந்தாளாம்.
- (இடுப்புச் சீலையை.)
இரவல் சோறு தஞ்சம் தாங்காது.
- (தாங்குமா.)
இரவல் துணியாம்; இரவல் துட்டாம்; இழுத்துக் கொட்டு மேளத்தை; இறுகிக் கட்டு தாலியை. 3385
இரவல் நகையும் இல்லாத வஸ்துவும் அவிசாரி அகமுடையானும் ஆபத்துக்கு உதவார்.
இரவல் புடைவையிலே இது நல்ல கொய்சகந்தான்.
- (கொடிய சுகமாம், யாழ்ப்பாண வழக்கு.)
இரவல் புருஷா, கதவைத் திற; ஏமாளிப் புருஷா, வீட்டை விடு.
இரவிமுன் பணி போல.
இரவியைக் கண்ட இருள் போல. 3390
இரவில் உண்ணாமல் பகல் உண்ணாதவனுக்குப் பெருத்தல் இல்லை.
இரவில் எதுசெய்தாலும் அரவில் செய்யாதே.
- (அரவு-ராகு காலம்.)
இரவில் போனாலும் பரக்கப் போக வேண்டும்.
இரவு உண்ணான் பருத்திருப்பான்.
- (அருத்தா பத்தி.)
இரவு எல்லாம் இறைத்தும் பொழுது விடிந்து போச்சு. 3395
இரவு எல்லாம் திருடினாலும் கன்னக்கோல் சாத்த ஓர் இடம் வேண்டாமா?
இரவு வேளையில் ருத்திராட்சப் பூனை போல்.
இராக் கண்ட கனவு மிடாப் போல வீங்கின கதை.
- (இராக் கண்ட சனி.)
இராச் செத்தால் பகல் பிழைக்கிறான்.
- (சூரியன்.)
இராத்திரி செத்தால் விளக்கெண்ணெய்க்கு இல்லை; பகலில் செத்தால் வாய்க்கரிசிக்கு இல்லை. 3400
இராப்பகல் கண்ணிலே.
இராப் பட்டினி கிடந்தவன் அகவிலை கேட்பானா?
- (அக விலையைக் குறைத்த கதை.)