பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/151

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

149


இருதயத்தில் நினைத்தது எல்லாம் எழுதிக் கட்டு.

இருதயத்து எழுந்த புண் போல.

இருதலைக் கொள்ளி எறும்பு போல்.

(ஆனேன்.)

இருதலைக் கொள்ளியில் எறும்பு பிழையாது.

இருதலை மணியன் பாம்பைப் போல். 3455

இருதலை வழக்கு நூலினும் செம்மை.

இரு தோணியில் கால் வைக்காதே.

இருந்த இடத்து வேலை என்றால் எங்கள் வீட்டுக்காரரையும் கூப்பிடுங்கள்.

(யாழ்ப்பாண வழக்கு.)

இருந்த இடத்து வேலைக்காரன் எங்கள் வீட்டு ஆண் பிள்ளையாம்.

(யாழ்ப்பாண வழக்கு.)

இருந்த இடம் ஏழு முழம் ஆழம் வெந்து போகும். 3460

இருந்த இடம் தெரியாமல் புல் முளைத்துப் போயிற்று.

இருந்த கால் மூதேவி; நடந்த கால் சீதேவி.

இருந்த நாள் எல்லாம் இருந்துவிட்டு ஊர்ப் பறையனுக்குத் தாரை வார்த்தது போல.

(வீடூர்ப் பறைவனுக்கு.)

இருந்தல்லவோ படுக்க வேணும்?

இருந்தவன் இருப்பவனுக்கு வழிகாட்டி. 3465

இருந்தவன் எழுந்திருக்கிறதற்குள்ளே நின்றவன் ஒரு காதம் போவான்.

(நெடுந்தூரம் போவான்.)

இருந்தவன் தலையிலே இடி விழுந்தாற் போல.

இருந்தவனுக்குப் போனவன் குணம்.

இருந்த வெள்ளத்தைத் தள்ளிற்றாம் வந்த வெள்ளம்.

இருந்தால் அப்பன்; இல்லாவிட்டால் சுப்பன். 3470

(சப்பன்.)

இருந்தால் இடுவது; இல்லையேல் விடுவது.

(இடுவது உரம்.)