தமிழ்ப் பழமொழிகள்
161
ஈசல் பிறந்தால் மழை மாறும்.
ஈசல் புற்றில் கரடி வாய் வைத்தாற் போல.
ஈசல் பெறும் போக்கில் சொறியாந் தவளை வேட்டை ஆடும். 3735
ஈசல் பெறும் போக்கில் தவளை தத்தி விழுங்குது.
- (விழுந்தது.)
ஈசல் பொறுக்கி பேசவும் அறியான்.
ஈசல் மடிந்தாற் போலே மாண்டதே சேனை.
- (மடிந்ததே.)
ஈசலுக்கு இறகு முளைத்தாற் போல,
ஈசலுக்கு எல்லாம் பகை. 3740
ஈசன் எப்படி அப்படித் தாசன்.
ஈசன் கருணை பேசுதல் அரிது.
ஈசனுக்கு ஏது நீச பங்கம்?
ஈசனுக்கு ஒப்பு எங்கும் இல்லை.
- (இங்கு ஒன்றும் இல்லை.)
ஈசனுடைய அடியார் மனம் எரிந்து புகைந்தால் வீண் போகுமா? 3745
ஈசனைப் போற்று; அரசனை வாழ்த்து.
ஈசான்ய மின்னலுக்கு எருதும் நடுங்கும்.
ஈசுவரன் கிருபை எல்லார்க்கும் போதும்.
ஈசுவரன் கோவில் திருநாள் ஒரு நாள் கந்தாயம்.
ஈசுவரனுக்குத்தான் வெளிச்சம். 3750
ஈசூரும் பூதூரும் என்றும் இழப்பு.
ஈஞ்சைக் கண்டால் கிழி; எருக்கைக் கண்டால் சொடுக்கு.
ஈட்டி எட்டின மட்டும் பாயும்; பணம் பதின் காதம் குத்தும்.
ஈட்டி எட்டின மட்டும் பாயும்; பணம் பாதாளம் வரையில் பாயும்.
- (எட்டு முழம் பாயும்.)
ஈட்டிய பொருளினும் எழுத்தே உடைமை. 3755
ஈட்டுக்கு ஈடும் சோட்டுக்குச் சோடுமாய் இருந்தால் வாசி.
ஈட்டுக்கும் பாட்டுக்கும் இருந்தாள் இரு குமரி.
- (இடுகுமரி.)