பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ்ப் பழமொழிகள்

161


ஈசல் பிறந்தால் மழை மாறும்.

ஈசல் புற்றில் கரடி வாய் வைத்தாற் போல.

ஈசல் பெறும் போக்கில் சொறியாந் தவளை வேட்டை ஆடும். 3735

ஈசல் பெறும் போக்கில் தவளை தத்தி விழுங்குது.

(விழுந்தது.)

ஈசல் பொறுக்கி பேசவும் அறியான்.

ஈசல் மடிந்தாற் போலே மாண்டதே சேனை.

(மடிந்ததே.)

ஈசலுக்கு இறகு முளைத்தாற் போல,

ஈசலுக்கு எல்லாம் பகை. 3740

ஈசன் எப்படி அப்படித் தாசன்.

ஈசன் கருணை பேசுதல் அரிது.

ஈசனுக்கு ஏது நீச பங்கம்?

ஈசனுக்கு ஒப்பு எங்கும் இல்லை.

(இங்கு ஒன்றும் இல்லை.)

ஈசனுடைய அடியார் மனம் எரிந்து புகைந்தால் வீண் போகுமா? 3745

ஈசனைப் போற்று; அரசனை வாழ்த்து.

ஈசான்ய மின்னலுக்கு எருதும் நடுங்கும்.

ஈசுவரன் கிருபை எல்லார்க்கும் போதும்.

ஈசுவரன் கோவில் திருநாள் ஒரு நாள் கந்தாயம்.

ஈசுவரனுக்குத்தான் வெளிச்சம். 3750

ஈசூரும் பூதூரும் என்றும் இழப்பு.

ஈஞ்சைக் கண்டால் கிழி; எருக்கைக் கண்டால் சொடுக்கு.

ஈட்டி எட்டின மட்டும் பாயும்; பணம் பதின் காதம் குத்தும்.

ஈட்டி எட்டின மட்டும் பாயும்; பணம் பாதாளம் வரையில் பாயும்.

(எட்டு முழம் பாயும்.)

ஈட்டிய பொருளினும் எழுத்தே உடைமை. 3755

ஈட்டுக்கு ஈடும் சோட்டுக்குச் சோடுமாய் இருந்தால் வாசி.

ஈட்டுக்கும் பாட்டுக்கும் இருந்தாள் இரு குமரி.

(இடுகுமரி.)