164
தமிழ்ப் பழமொழிகள்
ஈரம் உடையோரை யாவரும் புகழ்வர்.
ஈரம் உள்ள இடத்தில் ஈ மொய்க்கும்.
ஈரம் கண்டு அவிசாரி பிடிக்கிறவர்.
ஈரம் காய்ந்தால் பிட்டத்தில் மண் ஒட்டாது.
ஈரம் போகாமல் எருவை மூடு. 3810
ஈர மரத்தில் வயிர ஆணி கடாவினது போல.
ஈரலிலே மயிர் முளைத்தவன்.
ஈர விதைப்பும் ஈரூர் வேளாண்மையும் தாரம் இரண்டும் தனக்குப் பகை.
ஈர வெங்காயத்திற்கு இருபத்திரண்டு புரை.
- (இருபத்தெட்டு.)
ஈரூர் வேளாண்மையும் தாரம் இரண்டும் தனக்குப் பகை. 3815
ஈரூரில் உழுதவனும் கெட்டான்; இரண்டு பெண் கட்டினவனும் கெட்டான்.
ஈரை நினைப்பான், பேரை மறப்பான்.
- (மறக்கான்.)
ஈரைப் பேன் ஆக்கிப் பேனைப் பெருமாள் ஆக்குகிறது.
ஈவதினும் மேல் இல்லை; இரப்பதினும் தாழ்வு இல்லை.
ஈவதைக் கண்டார் யாவரும் அண்டார். 3820
- (கண்டால்.)
ஈ விழுந்தாலும் எடுத்தாலொழியப் போகுமா?
ஈ விஷ்டித்ததும் நாய் திருடித் தின்றதும்.
ஈவோனுக்கு ஒரு போது உணவு; இரப்போனுக்குப் பல போது உணவு.
ஈவோனுக்கு ஒரு போஜனம்; இரப்போனுக்கு ஏராளம்.
ஈழத்தில் செக்கு ஆட, இங்கே பதம் பார்க்க. 3825
ஈழமும் கொங்கும் எதிர்த்து மின்னினால் குட்டியை எதிர்த்துக் குடாப்பில் போடு.
ஈரமும் கொங்கும் எதிர்த்து மின்னினால் சாமத்துக்கு மழை தப்பாமல் வரும்.
ஈன்ற புலி போலே.
ஈன்ற மாடு இறை வானத்தைப் பிரிப்பது போல்.
ஈன்றவள் தாய் பாட்டி; இத் தாயியின் தாய் பூட்டி. 3830
- (பீட்டி.)