பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/167

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

165


ஈன்றோர் நஞ்சில் சான்றோர் இல்லை.

(ஈன்றோரைவிட.)

ஈனம் மானம் அற்றவன் இரந்து வயிறு வளர்ப்பான்.

ஈனருக்கு இடம் கொடுத்தால் இல்லிடம் எல்லாம் பாழ்.

ஈனரை அடுத்தால் மானம் அழியும்.

ஈனவும் தெரியாது; எடுக்கவும் தெரியாது. 3835

(நக்கவும்.)

ஈனனுக்கு இடம் கொடுத்தால் இல்லிடம் கைக் கொள்வான்.

ஈனனுக்கு இரு செலவு.

ஈனாத மாட்டுக்கு ஒரு கடுக்காய்; இளம் பிள்ளைத்தாய்ச்சிக்கு ஏழு கடுக்காய்.

ஈனாப் பெண்கள் இருவர் கூடினால் காயா வரகு நீறாய்ப் போம்.

(காயாப் புழுங்கல், யாழ்ப்பாண வழக்கு.)