176
தமிழ்ப் பழமொழிகள்
உதவாத செட்டிக்குச் சீட்டு எழுதினது போல.
உதவாப் பழங்கலமே, ஓசை இல்லா வெண்கலமே. 4075
உதவா முட்டி சுத்தரம், ஒதுகிறாளாம் மந்திரம்.
உதவி செய்வாருக்கு இடையூறு ஏது?
உதறி முடிந்தால் ஒரு குடுமிக்குப் பூ இல்லையா?
உதறு காலி முண்டை உதறிப் போட்டாள்.
உதறு காலி வந்தாள், உள்ளதும் கெடுத்தாள். 4080
- (பா-ம்.) எடுத்தாள்.
உதாரிக்குப் பொன் துரும்பு.
உதிக்கின்ற கதிரோன் முன்னே ஒளிக்குய் மின்மினியைப் போல்.
உதி பெருத்தாலும் உத்தரத்துக்கு உதவாது.
உதிரத்துக்கு அல்லவோ உருக்கம் இருக்கும்?
உதிரம் உறவு அறியும். 4085
உதைத்த கால் புழுக்கிறதற்கு முன்னே அடி வயிறு சீழ்க்கட்டுகிறது.
- (நெஞ்சு சீழ் கட்டிக் கொள்ளும்.)
உதைத்த காலை முத்தம் இடுவது.
உதைத்து வளர்க்காத பிள்ளையும் முறுக்கி வளர்க்காத மீசையும் உபயோகப்படா.
உதைப்பானுக்கு வெளுப்பான் ஜாதி வண்ணான்.
உதைப்பானுக்கு வெளுப்பான் ஜாதி வண்ணான்; கொட்டி வெளுப்பான் கொங்கு வண்ணான். 4090
உதைபட்ட நாய் ஊரெல்லாம் சுற்றினாற்போல.
உப்பளத்து மண்ணும் உழமண்ணும் செம்மண்ணும் காவேரி மண்ணும் கலந்து வழங்குகிறது.
உப்பின் அருமை உப்பு இல்லாவிட்டால் தெரியும்.
உப்பு இட்ட பாண்டமும் உபாயம் மிகுந்த நெஞ்சமும் தட்டி உடையாமல் தாமே உடையும்.
உப்பு இட்டவரை உள்ளளவும் நினை. 4095
உப்பு இட்டுக் கெட்டது மாங்காய், உப்பு இடாமற் கெட்டது தேங்காய்.
உப்பு இருக்கிறதா என்றால் பப்பு இருக்கிறது என்றார்,
- (பப்பு-பருப்பு.)
உப்பு இருந்த பாண்டமும் உளவு அறிந்த நெஞ்சமும் தப்பாமல் தட்டுண்டு உடையும்.