பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/182

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

180

தமிழ்ப் பழமொழிகள்


உயிர் என்ன வெல்லமா?

உயிர் காப்பான் தோழன். 4175

உயிர் தப்பியது தம்பிரான் புண்ணியம்.

உயிர் போகும் போதும் தைரியம் விடலாகாது.

உயிருக்கு மிஞ்சின ஆக்கினையும் இல்லை; கோவணத்துக்கு மிஞ்சின தரித்திரமும் இல்லை.

உயிருக்கு வந்தது மயிரோடே போயிற்று,

உயிரும் உடலும் போல. 4180

(உடம்பும்.)

உயிரைக் கொடுத்த சாமிக்கு மயிரைக் கொடுக்க வேணும்.

உயிரைப் பகைத்தேனோ! ஒரு நொடியில் கெட்டேனோ?

உயிரை வைத்திருக்கிறதிலும் செத்தாற் குணம்.

உயிரோடு இருக்கும் போது ஒரு கரண்டி நெய்க்கு வழி இல்லை. ஓமத்துக்கு ஒன்பது கரண்டி நெய் விட்டது போல.

உயிரோடு ஒரு முத்தம் கொடுக்கவில்லை; செத்த பிறகு கட்டிக் கட்டி முத்தமிட்டாளாம். 4185

உயிரோடு ஒரு முத்தம் தராதவள் செத்தால் உடன் கட்டை ஏறுவாளா?

உயிரோடு திரும்பிப் பாராதவள் செத்தால் முத்தம் கொடுப்பாளா?

உரத்த குடிக்கு அனர்த்தம் இல்லை.

உரத்தைத் தள்ளுமாம் உழவு.

உாம் உதவுவது ஊரார் உதவார். 4190

உரம் ஏற்றி உழவு செய்.

உரம் செய்கிறது உறவுடையான் செய்யமாட்டான்,

உரல் பஞ்சம் அறியுமா?

உரல் போய் மத்தளத்தோடு முறையிட்டது போல.

உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா? 4195

(அகப்பட்டு, அஞ்சுகிறதா?)

உரலிலே தலையை விட்டுக்கொண்டு உலக்கைக்குப் பயப்படலாமா?

உரலிலே தலை விட்டால் உலக்கைக்குத் தப்பலாமா?

(மாட்டிக்கொண்டு பயப்பட்டால் தீருமா?)

உரலிலே துணி கட்டியிருந்தாலும் உரிந்து பார்க்கவேண்டும் என்கிறான்.

உரலுக்கு ஒரு பக்கம், இடி; மத்தளத்துக்கு இரு பக்கமும் இடி.

உரலுக்குப் பஞ்சம் உண்டா? 4200