தமிழ்ப் பழமொழிகள்
185
உழுகிறதை விட்டு உழவன் சாமி ஆடினானாம்.
உழுகிற நாளில் ஊருக்குப் போய்விட்டு அறுக்கிற நாளில் அரிவாள் கொண்டு வந்தாற்போல். 4300
உழுகிற நாளில் ஊரை விட்டுப் போனால் அறுக்கிற நாளில் ஆள் தேட வேண்டாம்.
- (ஆள் தேவை இல்லை.)
உழுகிற மாட்டுக்கும் ஒரு படி கொள்ளு; ஊர் சுற்றுகிற மாட்டுக்கும் ஒரு படி கொள்ளா?
உழுகிற மாட்டை எருது நக்கினது போல.
உழுகிற மாட்டைக் கொம்பிலே அடித்தாற் போல.
உழுகிற மாட்டை நுகத்தால் அடித்தாற் போல. 4305
உழுகிற மாடு ஆனால் உள்ளூரில் விலை போகாதா?
- (போகும்.)
உழுகிற மாடு ஊருக்குப் போனால் ஏரும் கலப்பையும் எதிர்த்தாற் போல் வரும்.
உழுகிற மாடு பரதேசம் போனால் அங்கு ஒருவன் கட்டி உழுவான்; இங்கு ஒருவன் கட்டி உழுவான்.
உழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும்.
உழுகிறவன் கணக்குப் பார்த்தால் உழவுக் கோலும் மிஞ்சாது. 4310
- (உழக்கு நெல்லும்.)
உழுகிறவன்தான் வைக்கோல் போட வேண்டும்.
உழுகிறவனுக்குத்தான் தெரியும், உடம்பு வருத்தம்.
உழுத எருது ஆனாலும் ஒரு முடி நாற்றைத் தின்ன ஒட்டார்.
- (ஒரு முடி தின்னவிடார்.)
உழுத காலாலே உழப்பி விடு.
உழுத சேறு காய்ந்தால் உழக்கு நெல் காணாது. 4315
உழுத மாடு ஊருக்குப் போனால் அங்கும் ஒருசால் அடித்துக் கொண்டானாம்.
- (அடித்துக் கட்டி உழுதானாம்.)
உழுத மாடு பரதேசம் போச்சாம்; அங்கும் ஒரு சால் கட்டி உழுதானாம்.
உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குக்கூட மிஞ்சாது.
- (உழவுகோல் கூட மிச்சம் இல்லை.)