தமிழ்ப் பழமொழிகள்
195
உன்னை நீ அறிவாயாகில் உனக்கொரு கேடும் இல்லை.
- (கைவல்ய நவநீதம்.)
உன்னைப் பாடையிலே வைத்துப் பயணம் இட,
உன்னைப் பிடி, என்னைப் பிடி, உலகாத்தாள் தலையைப் பிடி,
உன்னைப் பிடி, என்னைப் பிடி என்று ஆய் விட்டது.
உன்னைப் பிழிந்தெடுத்துப் போடுவேன். 4540
உன்னையும் என்னையும் ஆட்டுகிறது மன்னி கழுத்துச் சிறு தாலி.
உன்னை வஞ்சித்தவனை ஒருபோதும் நம்பாதே.
உன்னை வாரிக் கொண்டு போக.
உன்னை வெட்டிப் பலி போட.
உன்னோடே பிறந்ததில் மண்ணோடே பிறக்கலாம். 4545
- (பிறப்பதில்.)
உனக்கு ஆச்சு, எனக்கு ஆச்சு; பார்க்கிறேன் ஒரு கை.
உனக்கு இருக்கிற கஞ்சியை எனக்கு வார்; பசியாமல் இருக்க வரந் தருகிறேன் என்ற கதை.
உனக்கு உட்பட்டும் பின்பாட்டுப் பாடுகிற மனிதர்கள் போல.
உனக்கு என்ன, கொம்பு முளைத்திருக்கிறதோ?
உனக்கு ஒட்டுத் திண்ணைபோல் இருக்கிறான். 4550
உனக்குக் கொடுப்பேனோ ஒரு காசுl; நேற்றோடு போச்சு புரட்டாசு.
- (புரட்டாசி.)
உனக்கு நான் அபயம்; எனக்கு நீ அபயம்.
- (யான்.)
உனக்குப் போடும் தண்டத்தை நாய்க்குப் போட்டாலும் வாலையாவது ஆட்டும்.
உனக்கும் பெப்பே; உங்கள் அப்பனுக்கும் பெப்பே.
உனக்கு மழை பெய்யும், எனக்கு நீர் தா என்றானாம். 4555
உனக்கு முதுகு வளைகிறதா?