பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/201

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

199


ஊமை ஊரைக் கெடுப்பான்; ஆமை ஆற்றைக் கெடுக்கும்.

(ஆமை கிணற்றைக் கெடுக்கும்.)

ஊமைக்கு உளறு வாயன் உற்பாத பிண்டம்.

ஊமைக்கு உளறு வாயன் சண்டப் பிரசண்டன்.

ஊமைக்குத் தெத்து வாயன் உயர்ந்த வாசாலகன்.

ஊமைக்கு வாய்த்தது ஒன்பதும் பிடாரி. 4630


ஊமை கண்ட கனா. (+ ஆருக்குத் தெரியும்.)

ஊமை கண்ட கனாப்போலச் சீமைப் பட்டணம் ஆகுமா?

ஊமை பிரசங்கம் பண்ணச் செவிடன் கேட்டது போல.

ஊமை போல இருந்து எருமை போலச் சாணி போட்டதாம்.

ஊமையர் சபையில் உளறு வாயன் மகாவித்துவான். 4635

(யாழ்ப்பாண வழக்கு.)

ஊமையன் கனவு கண்டது போலச் சிரிக்கிறான்.

ஊமையன் பாட, சப்பாணி ஆட, செவிடன் கேட்க, குருடன் பார்க்க.

ஊமையன் பேச்சுப் பழகின பேருக்குத் தெரியும்.

ஊமையாய் இருந்தால் செவிடும் உண்டு.

ஊமையின் பிரசங்கத்தைச் செவிடன் கேட்டானாம். 4640

ஊமையும் அல்ல, செவிடனும் அல்ல.

(செவிடும்.)

ஊமையும் ஊமையும் மூக்கைச் சொறிந்தாற் போல்.

ஊமையை விட உளறு வாயன் மேல்.

ஊர் அருகே ஒரு வயலும் உத்தரத்தில் ஒரு புத்திரனும்.

ஊர் அறிந்த பார்ப்பான். 4645

ஊர் அறிந்த பிராமணனுக்குப் பூணூல் எதற்கு?

ஊர் ஆளுகிற ராஜாவுக்குப் பேள இடம் கிடைக்கவில்லையாம்.

(துரைக்கு.)

ஊர் ஆளுகிறவன் பெண்டு பிடித்தால் ஆருடன் சொல்லி முறையிடுகிறது?

ஊர் ஆளுகிறவன் பெண்டாட்டிக்குப் பேள இடம் இல்லையாம்.

(பேண.)

ஊர் ஆளுகிறவனுக்குப் பேளப் புறக்கடை இல்லையா? 4650