பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/203

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

201


ஊர் ஒக்க ஓட வேண்டும்.

ஊர் ஓச்சன் பட்டினி.

ஊர் ஓசை அடங்க நெய் காய்ச்சினாளாம். 4675

ஊர் ஓசை அடங்கும் வரை வெண்ணெய் காய்ச்சினாளாம்,

ஊர் ஓட உடன் ஓட.

ஊர் ஓட ஒக்க ஓடு; நாடு ஓட நடு ஓடு.

ஊர் ஓடினால் ஒத்தோடு; ஒருவன் ஓடினால் கேட்டு ஓடு.

(யாழ்ப்பாண வழக்கு.)

ஊர் ஓமல் ஆனது அல்லால் ஒன்றும் அறியேன். 4680

ஊர் ஓரத்தில் கொல்லை; உழுதவனுக்குப் பயிர் இல்லை.

ஊர் ஓரத்து உழவுக்காரனும் உண்டவுடன் பேளாதவனும் உருப்படமாட்டான்.

ஊர்க்கடனும் உள்ளங்கைச் சிரங்கும் போல.

ஊர்க் கழுதை இருக்கக் கூத்தாடிக் கழுதைக்குச் சனி பிடித்தது.

ஊர்க் காக்காய் கரையிலே; வந்தட்டிக் காக்காய் வரப்பிலே. 4685

ஊர்க்குருவிமேலே ராம பாணம் தொடுக்கிறதா?

ஊர்க்கோடியில். ஒரு வீடு கட்டி ஓர்ப்படி தம்பிக்குப் பெண் கொடுத்தாற்போல்.

ஊர்க் கோழியும் நாட்டுக் கோழியும் கூடினால் உரலில் உள்ள புழுங்கல் அரிசிக்குச் சேதம்.

ஊர்கிறதென்றால் பறக்கிறது என்று சொல்லும் ஜனம்.

ஊர் கூடிச் செக்குத் தள்ளலாமா? 4690

ஊர் கூடிச் செக்குத் தள்ள, வாணியன் எண்ணெய் கொண்டு போக.

ஊர் கூடித்தானே தேர் இழுக்க வேண்டும்?

ஊர் கோப்பழிந்தால் ஓடிப் பிழை.

(கோப்பறிந்தால்.)

ஊர்ச் சக்கிலி எல்லாம் சேர்ந்து தோலைக் கெடுத்தனராம்.

ஊர்ச் சண்டை கண்ணுக்கு அழகு. 4695

ஊர் திரிந்த தேவடியாளுக்குப் பூணுால் அபூர்வமா?

(பூநூல்.)

ஊர் நடு நின்ற ஊர் மரம் போல.

ஊர் நத்தத்தில் நாய் ஊளையிட்டாற் போல.