பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/205

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

203


ஊரார் சொத்துக்குப் பேயாய்ப் பறக்கிறான்.

ஊரார் சொத்துத் தூமகேது.

(பொருள்.)

ஊரார் நாய்க்குச் சோறு போட்டால் அது உடையவன் வீட்டிலே போய்த்தான் குரைக்கும். 4725

ஊரார் பண்டம் உமி போல்; தன் பண்டம் தங்கம் போல்.

ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.

ஊரார் புடைவையில் தூரம் ஆவது.

ஊரார் வீட்டுக் கல்யாணமே; ஏன் அவிழ்ந்தாய் கோவணமே!

ஊரார் வீட்டுச் சோற்றைப் பார்; ஓசு பாடி வயிற்றைப் பார். 4730

ஊரார் வீட்டு நெய்யே; என் பெண்டாட்டி கையே.

ஊராருக்கெல்லாம் ஒரு வழி; இவனுக்கு ஒரு வழி.

ஊராருக்கெல்லாம் ஒரு வழி; ஓச்சனுக்கு ஒரு வழி.

ஊராரே வாருங்கள்; முதுகிலே குந்துங்கள்.

ஊராரைப் பகைத்து உயிரோடு இருந்தவர் இல்லை. 4735

ஊரான் ஆகில் உழுது விட்டுப் போகப் பண்ணைக்காரன் தண்ட வரி செலுத்த வேண்டியிருக்கிறது.

ஊரான் ஆகில் தாசன் பார்க்கிறதற்குச் சந்தேகமா?

ஊரான் ஆகில் தாசனுக்குப் பேள இடம் இல்லையா?

ஊரான் சொத்தை உப்பு இல்லாமல் தின்பான்.

ஊரான் மகன் நீரோடே போன கதை. 4740

ஊரான் வீட்டுச் சோற்றைப் பார்; சோனிப் பையன் வயிற்றைப் பார்.

ஊரில் இருக்கும் சனியனை வீட்டிலே அழைத்தாற் போல.

ஊரில் இளக்காரம் வண்ணானுக்குத் தெரியும்.

ஊரிலே எளியாரை வண்ணான் அறிவான்; சாதிப் பொன் பூண்பாரைத் தட்டான் அறிவான்.

ஊரில் ஒருத்தனே தோழன்; ஆரும் அற்றதே தாரம். 4745

ஊரில் நடக்கும் விஷயம் எல்லாம் ஊசல் குமரிக்குத் தெரியும்.

ஊரில் பஞ்சம் நாயில் தெரியும்.