204
தமிழ்ப் பழமொழிகள்
ஊரில் பெண் திரண்டால் எனக்கு என்ன ஆச்சு: உனக்கு என்ன ஆச்சு.
- (புரோகிதர் கூற்று.)
ஊரிலே அழகியைப் பிடிக்கப் போகிறானென்று ஆந்தையும் குரங்குமாய் ஓடிப் போச்சாம்.
ஊரிலே ஒரு குடியும் அல்ல; ஏரியிலே ஒரு பயிரும் அல்ல. 4750
ஊரிலே கல்யாணம்; மாரிலே சந்தனம்.
ஊரிலேயும் போவான்; சொன்னால் அழுவான்.
ஊருக்கு அரசன் ஆனாலும் தாய்க்குப் பிள்ளைதான்.
ஊருக்கு அரசன் காவல்; வீட்டுக்கு நாய் காவல்.
ஊருக்கு ஆகாதது உடம்புக்கும் ஆகாது. 4755
ஊருக்கு ஆகாத பிள்ளை தாய்க்கு ஆவானா?
- (ஆகான்.)
ஊருக்கு இட்டு ஊதாரி ஆனான்.
ஊருக்கு இரண்டு பைத்தியக்காரன்.
ஊருக்கு இரும்பு அடிக்கிறான்; வீட்டுக்குத் தவிடு இடிக்க முடியவில்லை.
ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி; அதற்கும் இளைத்தவன் மச்சினன் பெண்டாட்டி. 4760
ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி; அதற்கும் இளைத்தவன் பள்ளிக்கூடத்து வாத்தியார்.
ஊருக்கு உழைக்கிற கிராமணி.
ஊருக்கு எல்லாம் ஒரு வழி; உச்சிப் பிள்ளையாருக்கு ஒரு வழி.
ஊருக்கு எல்லாம் ஒரு வழி; உனக்கு ஒரு வழியா?
ஊருக்கு எல்லாம் சாஸ்திரம் சொல்லுகிற பல்லி, கூழ்ப் பானையில் விழுந்தது போல. 4765
- (காடிப் பானையில், கழுநீர்ப் பானையில்,)
ஊருக்கு ஏற்ற மாடு வாங்கினவனும் இல்லை; தாய்க்கு ஏற்ற பெண் கட்டினவனும் இல்லை.
ஊருக்கு ஏற்றுக் கெட்டான்; உள்ளதைச் சொல்லிக் கெட்டான்.
ஊருக்கு ஒடுங்கான், யாருக்கும் அடங்கான்.
ஊருக்கு ஒரு தேவடியாள் ஆருக்கென்று ஆடுவாள்?
- (தாசி.)