பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/208

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

206

தமிழ்ப் பழமொழிகள்


ஊரைக் காட்ட ஒரு நாய் போதும். 4795

ஊரைக் கெடுத்தான் ஒற்றைக் கடைக்காரன்.

ஊரைக் கெடுத்தான் ஒற்றை மாட்டுக்காரன்.

ஊரைக் கொளுத்துகிற ராஜாவுக்கு ஊதிக் கொடுக்கிறவன் மந்திரி.

ஊரைச் சுற்றி வந்த யானை ஒற்றடம் வேணும் என்றாற்போல்.

ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லாதே. 4800

ஊரைப் பகைத்தேனோ? ஒரு நொடியில் கெட்டேனோ?

ஊரைப் பார்க்கச் சொன்னால் பறைச்சேரியைப் பார்க்கிறான்.

ஊரைப் பார்த்து ஓம்பிப் பிழை.

ஊரைப் பிடித்த சனி பிள்ளையாரையும் பிடித்தது.

ஊரைப் பிடித்த சனியனுக்கு நாயைப் பிடித்துக் சூலம் போட்டது போல். 4805

(பீடையைப் பிடித்து. )

ஊரை வளைத்தாலும் உற்ற துணை இல்லை; நாட்டை வளைத்தானும் நல்ல துணை இல்லை.

(வீட்டை.)

ஊரை விட்டுப் போகும்போது தாரை விட்டு அழுதாளாம்.

ஊரை விழுங்குகிற மாமியாருக்கு அவளையே விழுங்குகிற மருமகள் வந்தாளாம்.

ஊரை விழுங்கும் மாமனாருக்கு அவரையே விழுங்கும் மாப்பிள்ளை.

ஊரோடு ஒக்க ஓடு; ஒருவன் ஓடினால் கேட்டு ஓடு. 4810

ஊரோடு ஒக்க நட; நாட்டோடு நடுவே ஓடு.

(ஒக்க நடு.)

ஊரோடு ஒட்டி வாழ்.

(ஒன்றி வாழ்.)

ஊரோடே ஒக்கோடே.

ஊழ்வினை ஓநாய் மாதிரி இருக்கும்.

ஊழிக் காய்ச்சல் அதிகமானால் சூனியக்காரன் கொள்ளை. 4815

ஊழி பெயரினும் கலங்கார் உறவோர்.

ஊழி பேரினும் ஊக்கமது கைவிடேல்.

ஊழிற் பெருவலி ஒன்று உண்டோ?

ஊழும் உற்சாகமும் ஒத்துக்கொள்ள வேண்டும்.

ஊற்றுத் தண்ணீரில் நாய்க்குப் பால் வார்த்தது போல. 4820