பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/209

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

207


ஊற்றுப் பாய்ச்சல் ஆற்றுப் பாய்ச்சல் பத்துக் குழியும், ஏரிப் பாய்ச்சல் நூறு குழியும் ஒன்று.

ஊற்றை நம்பினாலும் ஆற்றை நம்பாதே.

ஊற்றைப் பல்லுக்கு விளாங்காய் சேர்ந்தாற் போல்.

(பா-ம்.) ஊத்தை.

ஊற்றைப் பெண் பிள்ளை கழுவக் கழுவத் தேயும்.

(பா-ம்.) ஊத்தை.

ஊற்றை போகக் குளித்தவனும் இல்லை; பசி போகத் தின்றவனும் இல்லை. 4825

(பா-ம்.) ஊத்தை.

ஊற்றை மலத்தைக் கண்ட பன்றி உதட்டுக்குள்ளே சிரித்துக் கொண்டதாம்.

(பா-ம்.) ஊத்தை.

ஊறச்சே துடைக்க வேண்டும்.

ஊறல் எடுத்தவன் சொறிந்து கொள்வான்.

ஊறாக் கிணறு, உறங்காப் புளி, தீரா வழக்கு, திருக்கண்ணங் குடி.

(கண்ணங்குடி, சிக்கலுக்குப் பக்கத்தில் இருக்கிறது.)

ஊறுகாயைக் கடித்துக் கொண்டு ஒரு பானைச் சோற்றை என்னது என்பான். 4830

ஊறுகாயைக் கடித்துக் கொண்டு ஒரு பானைச் சோற்றைத் திணிப்பது போல.

ஊன்றக் கொடுத்த தடி உச்சியை உடைக்கிறது.

ஊன்றக் கொடுத்த தடி மண்டையைப் பிளந்தது போல.

ஊன்ற வைத்த கொம்பு உச்சி மோட்டை உச்சி மோட்டைப் பிளக்கிறது.

ஊனம் இல்லா உடம்புக்கு நாணம் ஏன்? 4835

ஊனம் இல்லான் மானம் இல்லான்.

ஊனுக்கு ஊன் உற்ற துணை.