தமிழ்ப் பழமொழிகள்
19
அடம்பங்கொடியும் திரண்டால் மிடுக்கு. [யாழ்ப்பாண வழக்கு]
அடம் பண்ணுகிற தேவடியாளுக்கு முத்தம் வேறே வேணுமா?
அடர்த்தியை அப்போதே பார்; புணக்கத்தைப் பின்னாலே பார். 315
அடர உழு; அகல விதை.
அடர விதைத்து ஆழ உழு.
அட ராவணா என்றானாம்.
அடா என்பவன் வெளியே புறப்பட்டான்.
அடாது செய்தவர் படாது படுவர். 320
அடாது மழை பெய்தாலும் விடாது நாடகம் நடக்கும்.
அடி அதிசயமே, சீமைச் சரக்கே!
அடி அதிரசம்; குத்துக் கொழுக்கட்டை.
- (பி-ம்.) அடி அப்பம்.
அடி அற்ற பனைபோல் விழுந்தான்.
அடி அற்ற மரம்போல அலறி விழுகிறது 325
- (பா-ம்.) பனமரம் போல.
அடி அற்றால் நுனி விழாமல் இருக்குமா?
அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவமாட்டார்.
அடி என்கிற ராஜாவும் இல்லை; பிடி என்கிற மந்திரியும் இல்லை.
- (பா-ம்.) மந்திரியும் இல்லை, பிடி என்கிற ராஜாவும்.
அடி என்பதற்கு அவளைக் காணோம்; பிள்ளை பிறந்தால் ராம கிருஷ்ணன் என்று பெயர் வைக்கவேண்டுமென்று ஆசைப் பட்டானாம்.
அடி என்பதற்குப் பெண்டாட்டி இல்லை; அஷ்ட புத்திரர்கள் எட்டுப்பேராம். 330
- (பா-ம்.) புத்திரவெகு பாக்கியம் நமஸ்து.
அடி என்பதற்குப் பெண்டாட்டி இல்லை; பிள்ளை பெயர் அருணாசலமாம்.
அடி என்று அழைக்கப் பெண்டாட்டி இல்லை; பிள்ளை எத்தனை, பெண் எத்தனை என்றானாம்.
அடி என்று சொல்ல அகமுடையாளைக் காணோம்; பிள்ளைக்குப் பேர் என்ன வைக்கிறது என்றானாம்.
அடி ஒட்டி அல்லவா மேற்கரணம் போட வேண்டும்?
அடி ஓட்டையாய் இருந்தாலும் கொழுக்கட்டை வேக வேண்டியது தானே? 335
அடிக்க அடிக்க அம்மியும் நகரும்.