தமிழ்ப் பழமொழிகள்
211
எட்டாப் பழத்திற்குக் கொட்டாவி விட்டாற் போல.
எட்டாப் பூத் தேவருக்கு எட்டும் பூத் தங்களுக்கு.
எட்டாம் நாள் வெட்டும் குதிரை; ஒன்பதாம் நாள் ஓடும் குதிரை.
எட்டாம் பேறு பெண் பிறந்தால் எட்டிப் பார்த்த வீடு குட்டிச்சுவர்.
- (இடம்.)
எட்டாவது ஆண் பிறந்தால் வெட்டி அரசாளும். 4910
எட்டாளம் போனாலும் கிட்டாதது எட்டாது.
எட்டி எட்டிப் பார்த்துக் குட்டிச் சுவரில் முட்டிக் கொள்ளலாம்.
எட்டி எட்டிப் பார்ப்பாரும், ஏணி வைத்துப் பார்ப்பாரும், குட்டிச்சுவர் போலக் குனிந்து நின்று பார்ப்பாரும்.
எட்டிக் கனியின்மேல் அழகாய் இருந்தும் உள்ளே இருக்கும் வித்தைப் போல்.
எட்டிக் குட்டி இறக்கிக் காலைப் பிடித்துக் கொள்கிறது. 4915
எட்டிக் குடுமியைப் பிடித்து இறங்கிக் காலைப் பிடிக்கிறவன்.
எட்டிக்குப் பால் வளர்த்தாலும் தித்திப்பு உண்டாகாது.
- (இனிப்பு.)
எட்டிக் கோட்டை கட்டினால் கிட்டி மழை உண்டு.
எட்டிப் பழத்தை இச்சிக்கிறது போல்.
- (இச்சிக்கிறதா?)
எட்டிப் பார்த்தால் எட்டு இழை நட்டம். 4920
எட்டிப் பார்த்தாற்போலக் கொட்டிக் கொண்டு போகிறான்.
எட்டிப் பிடித்தால் ஒரு கத்திப் பிடிக்கு ஆகாதா?
எட்டி பழுத்தால் என்ன? ஈயாதார் வாழ்ந்தால் என்ன?
எட்டி மரம் ஆனாலும் பச்சென்று இருக்க வேண்டும்.
- (பச்சென்று இருந்தால் கண்ணுக்கு அழகு.)
எட்டி மரம் ஆனாலும் வைத்த மரத்தை வெட்டாதே. 4925
- (வைத்த மரம் தோப்பாக வேணும்.)
எட்டி மரம் ஆனாலும் வைத்தவர்க்குப் பாசம்.
- (பக்ஷம்.)
எட்டி முளையிலும் இரட்டி அதிகம் உண்டாகுமா?
எட்டியிலே கட்டு மாம்பழம் உண்டாகுமா?
- (உண்ணலாமா?)
எட்டியுடன் சேர்ந்த இலவும் தீப்படும்.
- (எட்டியுடன் கூடி.)