பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/220

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

218

தமிழ்ப் பழமொழிகள்


எத்துவாரை எத்தி நான் எலி பிடிச்சுக்கிட்டு வாரேன்; கேட்பாரை கேட்டு நாழி கேப்பை வாங்கித் திரி.

(கேப்பை-கேழ்வரகு.)

எத்தூருக்குப் போனாலும் புத்தூருக்குப் போகாதே.

(யாழ்ப்பாண வழக்கு.)

எத்தேச காலமும் வற்றாப் பெருஞ் சமுத்திரம்.

எத்தைக் கண்டு ஏய்த்தான்? துப்பைக் கண்டு ஏய்த்தான். 5070

எத்தைச் சொன்னானோ பரிகாரி, அத்தைக் கேட்பான் நோயாளி.

(பரிகாரி-வைத்தியன், பிணியாளி.)

எத்தைத் தின்றால் பித்தம் தீரும்?

எதற்கும் உருகாதவன் இச்சைக்கு உருகுவான்.

எதற்கு ஜோடிக்க வேணும், இடித்துக் கிழிக்க வேணும்.

எதற்கு தலம் பேசினால் அகப்பைச் சூன்யம் வைப்பேன். 5075

எதார்த்த வாதி வெகுஜன விரோதி.

(பொதுஜன விரோதி, மகாஜன துவேஷி.)

எதிர்த்தவர் மார்புக்கு ஆணியாய் இரு.

எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம்.

எதிர்த்த வீடு ஏகாலி வீடு; அடுத்த வீடு அம்பட்டன் வீடு.

எதிர்த்தும்மல் எடுத்துக் கொடுக்கும். 5080

எதிர் நீச்சம் போடுகிறான்.

எதிர்ப்பாரைச் செயிப்பார் உண்டு.

எதிர் வீட்டுக் கல்யாணமே, ஏன் அழுதாம் கோவணமே?

எதிர் வீடு ஏகாலி வீடு; பக்கத்து வீடு பணி செய்வோன் வீடு; அடுத்த வீடு அம்பட்டன் வீடு.

எதிரி இளப்பமானால் கோபம் சண்டப் பிரசண்டம். 5085

எதிரிக்கு அஞ்சிப் படைக்குப் போகாதவன் நல்ல சேவகன் என்று கூறிக் கொண்டானாம்.

எதிரிக்கு இளக்காரமாய்ச் சொல்லுகிறதா?

(பேசுகிறதா?)

எதிரிக்குச் சகுனத் தடை என்று மூக்கை அறுத்துக் கொள்கிறதா?

எதிரி சுண்டெலி ஆனாலும் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.

எதிரி போட்டு மா இடித்தால் குளுமை நெல்லுக்குச் சேதாரம். 5090