218
தமிழ்ப் பழமொழிகள்
எத்துவாரை எத்தி நான் எலி பிடிச்சுக்கிட்டு வாரேன்; கேட்பாரை கேட்டு நாழி கேப்பை வாங்கித் திரி.
- (கேப்பை-கேழ்வரகு.)
எத்தூருக்குப் போனாலும் புத்தூருக்குப் போகாதே.
- (யாழ்ப்பாண வழக்கு.)
எத்தேச காலமும் வற்றாப் பெருஞ் சமுத்திரம்.
எத்தைக் கண்டு ஏய்த்தான்? துப்பைக் கண்டு ஏய்த்தான். 5070
எத்தைச் சொன்னானோ பரிகாரி, அத்தைக் கேட்பான் நோயாளி.
- (பரிகாரி-வைத்தியன், பிணியாளி.)
எத்தைத் தின்றால் பித்தம் தீரும்?
எதற்கும் உருகாதவன் இச்சைக்கு உருகுவான்.
எதற்கு ஜோடிக்க வேணும், இடித்துக் கிழிக்க வேணும்.
எதற்கு தலம் பேசினால் அகப்பைச் சூன்யம் வைப்பேன். 5075
எதார்த்த வாதி வெகுஜன விரோதி.
- (பொதுஜன விரோதி, மகாஜன துவேஷி.)
எதிர்த்தவர் மார்புக்கு ஆணியாய் இரு.
எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம்.
எதிர்த்த வீடு ஏகாலி வீடு; அடுத்த வீடு அம்பட்டன் வீடு.
எதிர்த்தும்மல் எடுத்துக் கொடுக்கும். 5080
எதிர் நீச்சம் போடுகிறான்.
எதிர்ப்பாரைச் செயிப்பார் உண்டு.
எதிர் வீட்டுக் கல்யாணமே, ஏன் அழுதாம் கோவணமே?
எதிர் வீடு ஏகாலி வீடு; பக்கத்து வீடு பணி செய்வோன் வீடு; அடுத்த வீடு அம்பட்டன் வீடு.
எதிரி இளப்பமானால் கோபம் சண்டப் பிரசண்டம். 5085
எதிரிக்கு அஞ்சிப் படைக்குப் போகாதவன் நல்ல சேவகன் என்று கூறிக் கொண்டானாம்.
எதிரிக்கு இளக்காரமாய்ச் சொல்லுகிறதா?
- (பேசுகிறதா?)
எதிரிக்குச் சகுனத் தடை என்று மூக்கை அறுத்துக் கொள்கிறதா?
எதிரி சுண்டெலி ஆனாலும் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.
எதிரி போட்டு மா இடித்தால் குளுமை நெல்லுக்குச் சேதாரம். 5090