பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/225

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

223


எருப்போட்டு ஏர் இடு.

எருமணம் இல்லாத பயிரும் நறுமணம் இல்லாத மலரும் வீணே.

எருமுட்டைப் போரைப் பேய் அடிக்குமா?

எருமை இருந்தால் அல்லவோ பால் கறக்க வேணும்?

எருமைக்கடா சந்தைக்குப் போச்சாம்; அங்கேயும் கட்டி உழுதானாம். 5200

எருமைக் கடா என்றாலும் குழந்தைக்கு ஒரு பீர் பால் கொடு என்கிறாய்.

(ஒரு பீர் பால் தா. கொடுக்காதா என்றானாம்.)

எருமைக் கன்று அருமைக் கன்று.

எருமைக் கிழமும் மாப்பிள்ளைக் கிழமும் இல்லை.

எருமைக்குச் சூடு போட்டது போல.

எருமைக்கு வெள்ளாடு ஏத்தக் கறக்குமா? 5205

எருமைக் கொம்பு காய்வதற்கு முன் எட்டுத்தரம் மழை பெய்யும்.

எருமைக் கொம்பு நனைகிறதற்குள்ளே எழுபது தரம் மழை வருகிறது.

(முறை.)

எருமைக் கோமயம் எக்கியத்துக்கு ஆகுமா?

(ஏற்குமா?)

எருமைச் சாணி ஓமத்திற்கு ஆகுமா?

(எக்கியத்திற்கு.)

எருமைப் பிட்டத்திலே விளக்கு வைத்தாற் போல. 5210

எருமை போய் ஏரியிலே விழுந்தால் தவளைத் தானே குதித்தோடும்.

எருமை மாட்டின்மேல் எத்தனை சூடு இருந்தாலும் தெரியாது; பசு மாட்டின்மேல் ஒரு சூடு இருந்தாலும் தெரியும்.

எருமை மாட்டின்மேல் மழை பெய்தது போல.

(எருமைமேல்.)

எருமை மாட்டுப் பிட்டத்தில் விளக்கு வைத்துப் படித்தான்.

எருமை மாட்டைத் தண்ணீரில் போட்டுக் கொண்டு விலை பேசுகிறது. 5215

எருமை மாடு கன்றுக்குட்டி போட்டாற் போல.

(கருத்து; அசுத்தம்.)

எருமை மாடு மூத்திரம் பெய்தாற் போல.