பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/231

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

229


எவ்வளவு தின்றாலும் நாய் வயிறு ஒட்டித்தான் இருக்கும்.

எவ்வளவு புரண்டாலும் ஒட்டுவது தான் ஒட்டும்.

எவர் வைத்த தீயோ, வீடு வெந்து போயிற்று.

எவன் ஆகிலும் தான் சாக மருந்து உண்பானா?

எவன் பெண்டாட்டி எவனோடு போனாலும் லெப்பைக்கு மூன்று பணம். 5340

எவனோ செத்தான்; அவள் ஏன் அழுதாள்?

எவனோ சொல்வானாம் கதை; அதைப் போல இருக்கிறதே!

எவனோ வைத்தான் தோப்பு; அதை இழுத்தடித்ததாம் காற்று.

எழுத்து அறச் சொன்னாலும் பெண் புத்தி பின்புத்தி.

எழுத்து அறிந்த மன்னன் கிழித்தெறிந்தான் ஓலை. 5345

(எறிவான்.)

எழுத்து அறிந்த வண்ணான் குறித்து எறிந்தான் ஓலை.

(கிழித்து.)

எழுத்து அறியாதவன் ஏட்டைச் சுமந்தது போல.

எழுத்து இல்லாதவன் கழுத்து இல்லாதவன்.

எழுத்து எண்ணிப் படித்தவன்.

எழுத்துக்குப் பால் மாறின கணக்கனும் உடுக்கைக்குப் பால் மாறிய தாசியும் கெடுவர். 5350

(உதட்டுக்குப் பால் மாறிய வருத்தம் அடைவர், செட்டி நாட்டு வழக்கு.)

எழுதத் தெரியாதவன் ஏட்டைக் கெடுத்தான்.

எழுத வழங்காத வாழ்க்கை கழுதை புரண்ட களம்.

எழுத வாசிக்கத் தெரியாமற் போனாலும் எடுத்துக் கவிழ்க்கத் தெரியும்.

எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா?

எழுதாத ஓலையும் பீற்றல் முறமும் வந்தது போல். 5355

எழுதி அறான் கணக்குக் கழுதை புரண்ட களம்.

எழுதிய விதி அழுதால் திருமா?

எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.

எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான்; படித்தவன் பாட்டைக் கெடுத்தான்.

எழுதுகிற எழுத்தாணி இரட்டைக் கூர்பட்டாற் போல. 5360

எழுதுகிற எழுத்தாணி குத்துகிறது போல.