பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/236

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

234

தமிழ்ப் பழமொழிகள்


என் கை வெல்லம் தின்கிறதா?

என் சீட்டுக் கிழிந்து போனால் அல்லவோ சாவு வரும்?

என் தலைக்கு எண்ணெய் ஊற்று; எருமை மாட்டுக்கும் புல் போடு.

என் தோலைச் செருப்பாய்த் தைத்துப் போடுவேன்.

என் பிழைப்புச் சிரிப்பாய்ச்சிரிக்கிறது தெருவிலே. 5465

(என் பவிஷூ, என் பேச்சு.)

என் புத்தியைச் செருப்பால் அடிக்க வேணும்.

என் புருஷனுக்கும் அரண்மனையில் வேலை.

என் பெண் பொல்லாது; உன் பிள்ளையை அடக்கிக் கொள்.

என் பேரில் தப்பு இருந்தால் என்னை மொட்டை அடித்துக் கழுதையின்மேல் ஏற்றிக் கொள்.

என்பைத் தின்று சதையைக் கொடுத்து வளர்ந்தார். 5470

(வளர்த்தாள்.)

என் மகள் வாரத்தோட வாரம் முழுகுவாள்? என் மருமகள் தீவிளிக்குத் தீவிளி முழுகுவாள்.

என் மருமகனுக்கு வேப்பெண்ணெயாம் தூக்கெண்ணெய்; விளக்கெண்ணெயாம் தலைக்கு எண்ணெய்.

என் முகத்தில் கரி தடவாதே.

(சாணி பூசாதே.)

என் முகத்தில் கரி பூசினாயே!

என் முகத்திலே பவிஷு இல்லை; கையிலே பணம் இல்லை. 5475

என் முகுதுத் தோல் உனக்குச் செருப்பாய் இருக்கிறது.

என் முதுகை நீ சொறிந்தால் உன் முதுகை நான் சொறிவேன்.

என் வயிற்றிலே பாலை வார்த்தாய்.

என் வீட்டுக்குப் பூவாயி வரப் பொன்னும் துரும்பாச்சு.

என் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய்? உன் வீட்டுக்கு வந்தால் என்ன கொடுக்கிறாய்? 5480

என் வீடும் பாழ்; எதிர்த்த வீடும் பாழ்.

என்று நின்றும் பொன்றுவர் ஒரு நாள்.

என்றும் இடி குலைச்சல் எப்பொழுதும் நீங்குவது இல்லை.

என்றும் காய்க்கும் எலுமிச்சை.