236
தமிழ்ப் பழமொழிகள்
என்னது இல்லை இரவல், மாமியாரது மரவை.
என்ன பிள்ளை? அணிற் பிள்ளை, தென்னம் பிள்ளை.
என்ன பெருமையடி ஏகாலி என்றால் அமுக்குப் பெருமையடி குருநாதா! 5505
- (ஆண்டவனே!)
என்னமாய்ச் சொல்லி இதமாய் உரைத்தாலும் கழுதைக்கு உபதேசம் காதில் ஏறாது.
என்ன மாயம் இடைச்சி மாயம்? மோரோடுதண்ணீர் கலந்த மாயம்.
என்ன விலை ஆனாலும் நாய் நாய்தானே?
என்னவோ சொன்னாளாம் பொம்மனாட்டி; அதைக் கேட்டானாம் கம்மனாட்டி.
என்ன ஜன்மம் வேண்டியிருக்கிறது? நாய் ஜன்மம். 5510
என்னால் ஆகாதது என் குசுவாலா ஆகும்?
என்னால் ஆன உப்புத் திருமஞ்சனம்.
என்னிலும் கதி கெட்டவன் என்னை வந்து மாலையிட்டான்.
- (கேடு கெட்டவன்.)
என்னிலும் மேல் இல்லை; என் நெல்லிலும் சாவி இல்லை.
என்னுடைய வீட்டுக்குப் பூவாயி வரப் பொன்னும் துரும்பாச்சு. 5515
என்னை ஆட்டுகிறது, உன்னை ஆட்டுகிறது, மன்னி கழுத்துத் தாலி.
என்னை இடுக்கடி, பாயைச் சுருட்டடி.
என்னை ஏண்டா அடிக்கிறாய்? பிள்ளையாண்டிருக்கிறேன்.
என்னைக் கண்டால் சணலுக்குள்ளே ஒளிக்கிறாய்? என் பெண் சாதியைக் கண்டால் சட்டிக்குள்ளே ஒளிக்கிறாய்.
என்னைக் கலந்தவர்கள் என்றாலும் கைநிறையப் பொன் கொடுத்தால் புணர்ந்து விடுவேன். 5520
- (விடுவான்.)
என்னைக் கெடுத்தது நரை, என் மகளைக் கொடுத்து முலை.
- (அழகு.)
என்னை நம்பாதே, தாலி வாங்காதே.
என்னைப் பவிஷு ஆற்றுகிறான்.
என்னைப் பார் என் மேனி அழகைப் பார்.