தமிழ்ப் பழமொழிகள்
29
அணில் ஏற விட்ட நாய் போல.
அணில் ஏறித் தென்னை அசையுமா?
- (அசைத்து, ஆடி விடுமா?)
அணில் ஓட்டமும் ஆமை நடையும். 560
- (அணில் ஊணும்.)
அணில் கொம்பிலே; ஆமை கிணற்றிலே,
அணில் நொட்டிப் பனை முறியுமா?
அணில் நொட்டியா தென்னை சாயும்?
அணில் நொட்டினதும் தென்னமரம் வீழ்ந்ததும்,
அணில் பிள்ளையின் தலை மீது அம்மிக் கல்லை வைத்தது போல. 565
அணில் வாயாற் கெட்டாற் போல.
அணிலைக் கொன்றால் ஆழாக்குப் பாவம்; ஓணானைக் கொன்றால் உழக்குப் புண்ணியம்.
அணிற் பிள்ளைக்கு நுங்கு அரிதோ? ஆண்டிச்சி பிள்ளைக்குச் சோறு அரிதோ?
அணு அளவு பிசகாது.
அணு மகா மேரு ஆகுமா? 570
அணு மலை ஆச்சு; மலை அணு ஆச்சு
அணுவுக்கு அணு, மகத்துக்கு மகத்து.
அணுவும் மகமேரு ஆகும்.
அணுவும் மலை ஆச்சு; மலையும் அணு ஆச்சு
- (உருவகம்.)
அணை கடந்த வெள்ளத்தைத் தடுப்பவர் யார்? 575
- (மறிப்பவர்.)
அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வருமா?
- (வராது.)
அணை கடந்த வெள்ளம் அழைக்கத் திரும்புமா?
அத்தச் செவ்வானம் அடை மழைக்கு அடையாளம்.
- (லட்சணம்.)
அத்தத்தின் மிகுதியல்லவா, அம்பட்டன் பெண் கேட்க வந்தது?
அத்தனைக்கு இத்தனை உயரம், ஐராவதம் போல் எங்கள் பசு. 580
அத்தனையும் சேர்த்தும் உப்பிட மறந்தது போல,
அத்தனையும்தான் செய்தாள், உப்பிட மறந்தாள்,
அத்தான் அரை அகமுடையான்.