பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/32

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

தமிழ்ப் பழமொழிகள்



அத்தான் செத்தால் மயிர் ஆச்சு; கம்பளி மெத்தை நமக்கு ஆச்சு.

அத்தான் முட்டி, அம்மாஞ்சி உபாதானம், மேலகத்துப் பிராம்மணன் யாசகமென்று கேட்டானாம். 585

அத்திக்காய் தெரியுமா? வட்டைக்காய் தெரியுமா?

(இடக்கர். )

அத்திப் பழத்தைப் பிட்டால் அத்தனையும் சொத்தை.

அத்திப் பழத்தைப் பிட்டுப் பார்த்தால் அத்தனையும் புழு.

(அத்திக்காயை.)

அத்திப் பூவை ஆர் அறிவார்?

அத்திப் பூவைக் கண்டவர் உண்டா? ஆந்தைக் குஞ்சைப் பார்த்தவர் உண்டா? 590

அத்தி பூத்தது ஆரும் அறியார்?

அத்தி பூத்தாற் போல்

அத்தி மரத்தில் தொத்திய கிளி போல,

(கனி போல.)

அத்தி முதல் எறும்பு வரை

(அத்தி-யானை,)

அத்தியும் பூத்தது; ஆனை குட்டியும் போட்டது. 595

அத்திரி மாக்கு, ஆறு தாண்டுகிறேனா. இல்லையா, பார்.

அத்து மீறிப் போனான், பித்துக்குளியானான்.

அத்து மீறினால் பித்து.

அத்தை இல்லாப் பெண்ணுக்கு அருமை இல்லை; சொத்தை இல்லாப் பவழத்துக்கு மகிமை இல்லை.

அத்தை இல்லாப் பெண்டாட்டி வித்தாரி, மாமியில்லாப் பெண்டாட்டி வயிறுதாரி. 600

அத்தை இல்லாப் பெண் வித்தாரி; மாமி இல்லாப் பெண் மாசமர்த்தி,

அத்தை இல்லா வீடு சொத்தை.

அத்தை இறப்பாளா, மெத்தை காலி ஆகுமா என்று காத்திருப்பது போல,

அத்தைக்கு ஒழியப் பித்தைக்கு இல்லை; ஒளவையார் இட்ட சாபத்தீடு.

அத்தைக்குத் தாடி முளைத்தால் சிற்றப்பா என்னலாமா? 605

அத்தைக்குப் பித்தம்; அவருக்குக் கிறுகிறுப்பு.

அத்தைக்கு மீசை முளைத்தால் சிற்றப்பா.

அத்தை கடன்காரி; அடி நாளைய சத்துரு,

அத்தைச் சொல்லடா சீமானே,