பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/43

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

41


அமிஞ்சிக்கு உழுதால் சரியாய் விளையுமா?

அமிஞ்சி வெட்டிக்கு ஆள் இருக்கிறது.

அமிஞ்சி வேலை.

அமுக்கினால் போல் இருந்து அரணை அழிப்பான்.

அமுத்தல் பேர் வழி. 865

அமுதம் உண்கிற வாயால் விஷம் உண்பார்களோ?

அமுதுபடி பூஜ்யம்; ஆடம்பரம் சிலாக்யம்.

(அதிகம்.)

அமைச்சன் இல்லாத அரசும் அகமுடையான் இல்லாத ஆயிழையும்.

அமைதி ஆயிரம் பெறும்.

அமைதி கெட்ட நெஞ்சம் ஆடி ஆடிக் கொஞ்சும். 870

அயல் ஊர் லாபமும் உள்ளூர் நஷ்டமும் ஒன்று.

அயல் வீட்டு ஆண்மகன் அவஸ்தைக்கு உதவான்.

அயல் வீட்டு நெய்யே, என் பெண்டாட்டி கையே.

(அயலான்.)

அயல் வீட்டுப் பிள்ளை ஆபத்துக்கு உதவுவானா?

(வீட்டான் பிள்ளை.)

அயல் வீட்டுப் பையா பாம்பைப் பிடி; அல்லித் தண்டு போல் குளிர்ந்திருக்கும். 875

அயல் வீடு வாழ்ந்தால் பரதேசம் போகிறது.

அயலார் உடைமைக்குப் பேயாய்ப் பறக்கிறான்.

(ஆந்தையாய்.)

அயலார் உடைமையில் அந்தகன் போல் இரு.

அயலார்க்குத் துரோகம் ஐந்தாறு நாள் பொறுக்கும்; ஆத்மத் துரோகம் அப்போதே கேட்கும்.

அயலார் வாழ்ந்தால் அஞ்சு நாள் பட்டினி கிடப்பான். 880

அயலார் வாழ்ந்தால் அடி வயிற்றில் நெருப்பு.

அயலான் வீட்டுப் பிள்ளை ஆபத்துக்கு உதவுமா?

அயலூர் நாணயக்காரனைவிட உள்ளூர் அயோக்கியன் மேல்.

அயன் அமைப்பை யாராலும் தள்ளக்கூடாது.

(சமைப்பை.)

அயன் இட்ட எழுத்தில் அணுவளவும் தப்பாது. 885

(எழுதின எழுத்தில்.)

அயன் இட்ட கணக்கு ஆருக்கும் தப்பாது.

அயிரையும் சற்றே அருக்குமாம் வீட்டுக்குள் போட்டுப் பிசகாமல்.