தமிழ்ப் பழமொழிகள்
43
அரசன் அருள் அற்றால் அனைவரும் அற்றார்.
அரசன் அளவிற்கு ஏறிற்று. 915
அரசன் அன்று அறுப்பான்; தெய்வம் நின்று அறுக்கும்.
- (யாழ்ப்பாண வழக்கு ஒறுப்பான்.)
அரசன் அன்று கொல்லும்; தெய்வம் நின்று கொல்லும்.
- (கேட்கும்.)
அரசன் ஆட்சிக்கு ஆகாச வாணியே சாட்சி.
அரசன் ஆண்டால் என்ன? மனிதன் ஆண்டால் என்ன?
அரசன் ஆனைமேல் வருகிறான் என்று வீட்டுக் கூரைமேல் ஏறினானாம். 920
அரசன் இருக்கப் பட்டணம் அழியுமா?
அரசன் இல்லாத நாடு, புருஷன் இல்லாத வீடு.
அரசன் இல்லாப் படை அம்பலம்.
அரசன் இல்லாப் படை வெட்டுமா?
அரசன் இல்லாப் படை வெல்வது அரிது. 925
அரசன் உடைமைக்கு ஆகாச வாணி சாட்சி.
அரசன் எப்படியோ அப்படியே குடிகள்.
அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி.
- (குடிகள்.)
அரசன் ஒன்றை இகழ்ந்தால் ஒக்க இகழ வேண்டும். ஒன்றைப் புகழ்ந்தால் ஒக்கப் புகழ வேண்டும்.
அரசன் கல்லின்மேல் வழுதுணை காய்க்கும் என்றால் கொத்தில் ஆயிரம் குலையில் ஆயிரம் என்பார்கள். 930
- (கத்தரிக்காய்.)
அரசன் குடுமியையும் பிடிக்கலாமென்று அம்பட்டன் வேலையை விரும்பினது போல.
அரசன் சீறின் ஆம் துணை இல்லை.
அரசன் நினைத்த அன்றே அழிவு.
அரசன் மெச்சியவள் ரம்பை.
அரசன் வரை எட்டியது. 935
அரசன் வழிப்பட்டதே அவனி.
அரசன் வழிப்படாதவன் இல்லை.
அரசன் வீட்டுக் கோழி முட்டை ஆண்டி வீட்டு அம்மியை உடைத்தது.
அரசனுக்கு அஞ்சி வலியார் எளியாருக்கு அநுகூலம் ஆகிறது.
அரசனுக்கு ஒரு சொல், அடிமைக்குத் தலைச் சுமை. 940