46
தமிழ்ப் பழமொழிகள்
அரி என்கிற அக்ஷரம் தெரிந்தால் அதிக்கிரமம் பண்ணலாமா?
- (அதிகாரம் பண்ணலாமா?)
அரி என்றால் ஆண்டிக்குக் கோபம்; அரன் என்றால் தாதனுக்குக் கோபம்.
அரிக்கிற அரிசியை விட்டுச் சிரிக்கிற சின்னப் பையனைப் பார்த்தாளாம்.
அரிகரப் பிரம்மாதிகளாலும் முடியாத காரியம்.
அரிச்சந்திரன் அவன் வீட்டுக் கொல்லை வழியாகப் போனானாம். 990
அரிச்சந்திரன் வீட்டுக்கு அடுத்த வீடு.
- (வீட்டுக்காரன் அவன்.)
அரிசி அள்ளின காக்கைபோல.
அரிசி ஆழாக்கு ஆனாலும் அடுப்புக்கட்டி மூன்று வேண்டும்.
- (உழக்கு.)
அரிசி இருந்தால் பிட்டு ஆகுமா?
அரிசி இல்லாவிட்டால் பருப்பும் அரிசியுமாய்ப் பொங்கு. 995
அரிசி இறைத்தால் ஆயிரம் காக்கை.
அரிசி உழக்கு ஆனாலும் திருவந்திக் காப்புக்குக் குறைவு இல்லை.
அரிசி உண்டானால் வரிசை உண்டு. அக்காள் உண்டானால் மச்சான் உண்டு.
- (தண்டலையார் சதகம்.)
அரிசி என்று அள்ளிப் பார்ப்பாரும் இல்லை, உமி என்று ஊதிப் பார்ப்பாரும் இல்லை.
- (அள்ளவும் முடியவில்லை. ஊதவும் முடியவில்லை.)
அரிசிக்குத் தக்க உலையும் அகமுடையானுக்குத் தக்க வீறாப்பும். 1000
அரிசிக்குத் தக்க கனவுலை.
அரிசிக் குற்றம் சாதம் குழைந்தது; அகமுடையான் குற்றம் பெண்ணாய்ப் பிறந்தது.
அரிசி கொடுத்து அக்காள் உறவு என்ன?
அரிசி கொடுத்து அக்காள் வீட்டில் சாப்பாடா?
- (என்ன சாப்பாடு?)
அரிசி கொண்டு அக்காள் வீட்டுக்குப் போவானேன்? 1005
அரிசி சிந்தினால் அள்ளி விடலாம்; வார்த்தை சிந்தினால் வார முடியுமா?
அரிசிப் பகையும் அகமுடையாள் பகையும் கிடையாது.
- (அகமுடையான்.)
அரிசிப் பல்காரி அவிசாரி, மாட்டுப் பல்காரி மகராஜி.