தமிழ்ப் பழமொழிகள்
49
அருமை அற்ற வீட்டில் எருமையும் குடி இராது.
- (இல்லாத வீட்டில். எருமையும் சேராது.)
அருமை அறியாதவன் அற்றென்ன? உற்றென்ன? 1055
அருமை அறியாதவன் ஆண்டு என்ன? மாண்டு என்ன?
- (இருந்தென்ன? இறந்தென்ன?)
அருமை அறியாதவனிடத்தில் போனால் பெருமை எல்லாம் குறைந்து போம்.
அருமை பெருமை அறிந்தவன் அறிவான்.
அருமை மருமகன் தலைபோனால் போகட்டும்; ஆதிகாலத்து உரல் போகலாகாது.
அருவருத்த சாப்பாட்டை விட மொரமொரத்த பட்டினி மேலானது. 1060
- (விறுவிறுத்த பட்டினி.)
அருவருப்பான சோற்றைக்காட்டிலும் விறுவிறுப்பான பசி மேலானது.
அருவருப்புச் சோறும் அசங்கியக் கறியும்.
அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை; பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை.
அருள் வேணும்; பொருள் வேணும்; அடக்கம் வேணும்.
அருள் வேணும்; பொருள்வேணும்; ஆகாய வாணி துணையும் வேணும். 1065
அரே அரே என்பார் எல்லாம் அமுது படைப்பார்களா?
- (அழுது படைப் பார்களா?)
அரை அடி ஏறினால் ஓரடி சறுக்குகிறது.
அரைக் கல்வி முழு மொட்டை.
- (அறக்கல்வி.)
அரைக்கவும் மாயம்; இரைக்கவும் மாயம்.
அரைக்காசு என்றாலும் அரண்மனைச் சேவகம் நல்லது. 1070
அரைக் காசுக் கல்யாணத்துக்கு ஆனை விளையாட்டு வேறா?
அரைக் காசுக்கு அழிந்த கற்பு ஆயிரம் மரக்கால் பொன் கொடுத்தாலும் வருமா?
- (கிடையாது.)
அரைக் காசுக்குக் கல்யாணம்; அதிலே கொஞ்சம் வாண வேடிக்கை.
அரைக் காசுக்குக் குதிரை வாங்கவும் வேண்டும்; ஆற்றைக் கடக்கப் பாயவும் வேண்டும்.
அரைக் காசுக்குப் போன மானம் ஆயிரம் கொடுத்தாலும் வராது. 1075
- (போன வெட்கம் வருமா?)