பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/77

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

75


ஆ ஆ என்பவருக்கு என்ன? அன்னம் படைப்பவர்க்கல்லவா தெரியும். 1720

ஆ என்ற ஏப்பமும் அலறிய கொட்டாவியும் ஆகா.

ஆ என்று போனபிறகு அள்ளி இடுகிறதா?

(பி-ம்.) இடுவது யார்?

ஆக்க அறியாவிட்டால் புளியைக் கரை; அழகு இல்லாவிட்டால் மஞ்சளைப் பூசு.

(பி-ம்.) அறியாதவள் புளியைக் குத்தினானள், இல்லாதவள் மஞ்சளைப் பூசினாள்.

ஆக்கப் பிள்ளை நம் அகத்தில்; அடிக்கப் பிள்ளை அயல் வீட்டிலோ?

(பி-ம்.) நம் வீட்டில், அடிக்கிற பிள்ளை.

ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்கல் ஆகாதா? 1725

(பி-ம்.) பொறுத்தவனுக்கு ஆறப் பொறாதோ? பொறுத்த உனக்கு.

ஆக்கம் கெட்ட அக்காள் மஞ்சள் அரைத்தாலும் கரி கரியாக வரும்.

ஆக்கம் கெட்ட அண்ணன் வேலைக்குப் போனால் வேலை கிடைக்காது; வேலை கிடைத்தாலும் கூலி கிடைக்காது.

ஆக்க மாட்டாத அழுகல் நாரிக்குத் தேட மாட்டாத திருட்டுச் சாவான்.

ஆக்க மாட்டேன் என்றால் அரிசியைப் போடு.

ஆக்கவில்லை, அரிக்கவில்லை; மூக்கெல்லாம் முழுக்கரியாக இருக்கிறதே! 1730

ஆக்க வேண்டாம், அரிக்க வேண்டாம் பெண்ணே; என் அருகில் இருந்தால் போதுமடி பெண்ணே.

(பி-ம்.) கண்ணே.

ஆக்கி அரித்துப் போட்டவள் கெட்டவள்; வழி காட்டி அனுப்பினவள் நல்லவள்.

ஆக்கிக் குழைப்பேன்; அரிசியா இறக்குவேன்.

ஆக்கிப் பெருக்கி அரசாள வைத்தேன்; தேய்த்துப் பெருக்கித் திரிசமம் பண்ணாதே.