பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/78

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

தமிழ்ப் பழமொழிகள்


ஆக்கினவள் கள்ளி; உண்பவன் சமர்த்தன். 1735

ஆக்கினையும் செங்கோலும் அற்றன அரை நாழிகையிலே.

ஆக்குகிறவள் சலித்தால் அடுப்புப் பாழ்; குத்துகிறவள் சலித்தால் குந்தாணிபாழ்.

(பி-ம்.) அன்னம் பாழ்.

ஆக்குகிறவளும் பெண்; அழிக்கிறவளும் பெண்.

ஆகட்டும் போகட்டும், அவரைக் காய் காய்க்கட்டும்; தம்பி பிறக்கட்டும்; தம்பட்டங்காய் காய்க்கட்டும்; அவனுக்குக் கல்யாணம் ஆகட்டும்; உன்னைக் கூப்பிடுகிறேனா, இல்லயா பார் என்றானாம்.

ஆகடியக்காரன் போகடியாய்ப் போவான். 1740

ஆக வேணும் என்றால் காலைப் பிடி; ஆகா விட்டால் கழுத்தைப்பிடி.

ஆகாசக் கோட்டை கட்டியது போல.

ஆகாசத் தாமரை.

ஆகாசத்தில் எறிந்தால் அங்கேயே நிற்குமா?

ஆகாசத்தில் பறக்க உபதேசம் சொல்லுகிறேன்; என்னை ஆற்றுக் கப்பால் தூக்கிவிடு என்கிறார் குரு. 1745

ஆகாசத்திலிருந்து அறுந்து விட்டேன்; பூமி தேவி ஏற்றுக் கொண்டாள்.

ஆகாசத்தக்கு மையம் காட்டுகிறது போல்.

ஆகாசத்துக்கு வழி எங்கே என்றால் போகிறவன் தலைமேலே.

ஆகாசத்தைப் பருந்து எடுத்துக் கொண்டு போகிறதா?

(பி-ம்.) பருந்தா எடுத்துக் கொண்டு போகிறது?

ஆகாசத்தையும் வடிகட்டுவேன். 1750

(பி-ம்.) வடிகட்டுவான்.

ஆகாசத்தை வடுப்படாமல் கடிப்பேன் என்றான்.

(பி-ம்.) கடிக்காலாமா?

ஆகாசம் பார்க்கப் போயும் இடுமுடுக்கா?

ஆகாசம் பூமி பாதாளம் சாட்சி.

ஆகாசம் பெற்றது, பூமி தாங்கினது

ஆகாசமே விழுந்தாற் போலப் பேசுகிறாயே! 1755

ஆகாச வர்த்தகன்.

ஆகாச வல்லிடி அதிர இடித்தது.

ஆகாத்தியக்காரனுக்கு ஐசுவரியம்; அஷ்ட தரித்திரனுக்குப் பெண்ணும் பிள்ளையும்.

ஆகாத்தியக்காரனுக்கு ஐசுவரியம் வந்தால் பிரம்மகத்திக்காரனுக்குப் பிள்ளை பிள்ளையாய்ப் பிறக்குது.