பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/94

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

தமிழ்ப் பழமொழிகள்


ஆண்டிச்சி பெற்றது அஞ்சும் குரங்கு

(பா-ம்.) அவலம்.

ஆண்டி சங்கை ஏன் ஊதுகிறான்? 2130

ஆண்டி செத்தான்; மடம் ஒழிந்தது.

ஆண்டி சொன்னால் தாதனுக்குப் புத்தி எங்கே போச்சு?

ஆண்டிச்சி பெற்ற அஞ்சும் குரங்கு; பாப்பாத்தி பெற்ற பத்தும் பதர்.

ஆண்டி சோற்றுக்கு அழுகிறான்; லிங்கம் பஞ்சாமிர்தத்துக்கு அழுகிறது.

ஆண்டி பெற்ற அஞ்சும் அவலம். 2135

ஆண்டி பெற்ற அஞ்சும் குரங்கு; முண்டச்சி பெற்ற மூன்றும் முண்டைகள்.

ஆண்டி பெற்ற அஞ்சும் பேய்; பண்டாரம் பெற்ற பத்தும் பாழ்.

(பா-ம்.) அஞ்சும் பிடாரி.

ஆண்டி மகன் ஆண்டி.

ஆண்டி மகன் ஆண்டியானால் நேரம் அறிந்து சங்கு ஊதுவான்.

ஆண்டி மடம் கட்டினது போலத்தான். 2140

ஆண்டியும் ஆண்டியும் கட்டிக் கொண்டால் சாம்பலும் சாம்பலும் ஒட்டிக் கொள்ளும்.

(பா-ம்.) முட்டிக் கொண்டால்.

ஆண்டியும் தாதனும் தோண்டியும் கயிறும்.

ஆண்டியும் பார்ப்பானும் தோண்டியும் கயிறும் போல.

ஆண்டியே சோற்றுக்கு அலையும் போது லிங்கம் பால் சோற்றுக்கு அழுகிறதாம்.

(பா-ம்.) அன்னத்துக்கு.

ஆண்டியை அடித்தானாம்; அவன் குடுவையைப் போட்டு உடைத்தானாம். 2145

ஆண்டியைக் கண்டால் லிங்கன்; தாதனைக் கண்டால் ரங்கன்.

(+ என்கிறான்.)

ஆண்டி வேஷம் போட்டும் அலைச்சல் தீரவில்லை.

ஆண்டு ஆண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ மாநிலத்தில்.

(பா-ம்.) மாண்டார் திரும்புவார்களா?