92
தமிழ்ப் பழமொழிகள்
ஆண்டிச்சி பெற்றது அஞ்சும் குரங்கு
- (பா-ம்.) அவலம்.
ஆண்டி சங்கை ஏன் ஊதுகிறான்? 2130
ஆண்டி செத்தான்; மடம் ஒழிந்தது.
ஆண்டி சொன்னால் தாதனுக்குப் புத்தி எங்கே போச்சு?
ஆண்டிச்சி பெற்ற அஞ்சும் குரங்கு; பாப்பாத்தி பெற்ற பத்தும் பதர்.
ஆண்டி சோற்றுக்கு அழுகிறான்; லிங்கம் பஞ்சாமிர்தத்துக்கு அழுகிறது.
ஆண்டி பெற்ற அஞ்சும் அவலம். 2135
ஆண்டி பெற்ற அஞ்சும் குரங்கு; முண்டச்சி பெற்ற மூன்றும் முண்டைகள்.
ஆண்டி பெற்ற அஞ்சும் பேய்; பண்டாரம் பெற்ற பத்தும் பாழ்.
- (பா-ம்.) அஞ்சும் பிடாரி.
ஆண்டி மகன் ஆண்டி.
ஆண்டி மகன் ஆண்டியானால் நேரம் அறிந்து சங்கு ஊதுவான்.
ஆண்டி மடம் கட்டினது போலத்தான். 2140
ஆண்டியும் ஆண்டியும் கட்டிக் கொண்டால் சாம்பலும் சாம்பலும் ஒட்டிக் கொள்ளும்.
- (பா-ம்.) முட்டிக் கொண்டால்.
ஆண்டியும் தாதனும் தோண்டியும் கயிறும்.
ஆண்டியும் பார்ப்பானும் தோண்டியும் கயிறும் போல.
ஆண்டியே சோற்றுக்கு அலையும் போது லிங்கம் பால் சோற்றுக்கு அழுகிறதாம்.
- (பா-ம்.) அன்னத்துக்கு.
ஆண்டியை அடித்தானாம்; அவன் குடுவையைப் போட்டு உடைத்தானாம். 2145
ஆண்டியைக் கண்டால் லிங்கன்; தாதனைக் கண்டால் ரங்கன்.
- (+ என்கிறான்.)
ஆண்டி வேஷம் போட்டும் அலைச்சல் தீரவில்லை.
ஆண்டு ஆண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ மாநிலத்தில்.
- (பா-ம்.) மாண்டார் திரும்புவார்களா?