தமிழ்ப் பழமொழிகள்
221
சாலோடு முழவைத் தட்டு.
சாவாமற் கற்பதே கல்வி; பிறர் ஏவாமல் உண்டதே ஊண். 10640
- (பிறரிடத்தில் ஏகாமல் உண்பதே ஊண்.)
சாவாரைப் போலே வாழ்வார்; வாழ்வாரைப் போலே சாவார்.
சாவுக்குப் பிடித்தால் லங்கணத்துக்கு வரும்.
- (சாவுக்குப் போட்டால்.)
சாவுக்கு வாடா என்றால் பாலுக்கு வருவான்.
- (வந்தது போல.)
சாவுப் பானை விடியாது; சங்கடப் பானை விடியும்.
சாவேரியே ராகம்; காவேரியே தீரம். 10645
சாளக்கிராமம் சாமியாருக்குச் சோறு போடுமா?
சாற்றிலே பீ; இறுத்தாற் போல வாரு.
சாற்றிலே வேண்டாம்; தெளிவிலே வாரு.
- (கீற்றிலே போடு.)
சாற்றுக்குப் புளியங்காய் நறுக்கினாற் போல.
சாறு மிஞ்சினால் பாறை: சாந்து மிஞ்சினால் குப்பை. 10650
சான்றோர் அவைப்படிற் சாவாதாம் பாம்பு.
- (சாவாதாம்.)
சான்றோர் இல்லாத சபை குறவர் சேரி.
சான்றோர் கயவர்க்கு உரையார் மறை.
- (மறை-இரகசியம். பழமொழி தானுாறு.)
சாஸ்திர உறுதிக்குக் கிரகணம்; மந்திர உறுதிக்குப் பாம்பு.
சாஸ்திரத்துக்குச் சாஸ்திரம்; சுகத்துக்குச் சுகம். 10655
சாஸ்திரம் பார்த்துப் பெண்ணைக் கொள்; கோத்திரம் பார்த்துப் பெண்னைக் கொடு.
சாஸ்திரம் பொய் என்றால் கிரகணத்தைப் பார்.
சாஸ்திராயச சுகாயச.