46
தமிழ்ப் பழமொழிகள்
கண்டால் தண்டம்; வந்தால் பிண்டம்.
- (சந்நியாசிகளுக்கு.)
கண்டால் துணை; காணா விட்டால் மலை. 6705
கண்டால் தெரியாதா, கம்பளி ஆட்டு மயிரை?
கண்டால் முறை சொல்கிறது; காணா விட்டால் பெயர் சொல்கிறது.
கண்டால் ரங்கசாமி, காணா விட்டால் வடுகப்பயல்.
கண்டால் வத்தி; காணா விட்டால் கொள்ளி.
கண்டி ஆயிரம், கப்பல் ஆயிரம், சிறு கம்பை ஆயிரம். 6710
- (சிறு கம்பை-தேவகோட்டையிலிருந்து கிழக்கே 12 மைல்; கப்பலூர், சிறு கம்பையூருக்கு அருகில் உள்ளது. கண்டியூர் நிலம் மாவில் ஆயிரம் கலம் விளையும். பிற ஊர் நிலப்பரப்பு அதிகம்.)
கண்டிப்பு இருந்தால் காரியம்.
கண்டியிலே ஆனைகுட்டி போட்டால் உனக்காச்சா? எனக்காச்சா?
கண்டிருந்தும் மலத்தைக் கவிழ்ந்திருந்து தின்பார்களா?
கண்டு அறிந்த நாயும் அல்ல; கனம் அறிந்த பேயும் அல்ல.
கண்டு அறிய வேண்டும் கரும்பின் சுகம்; உண்டு அறிய வேண்டும் 6715
கண்டு அறியாதவன் பெண்டு படைத்தால் காடு மேடு எல்லாம் இழுத்துத் திரிவானாம்.
- (கட்டி இழுப்பானாம்; விட்டடிப்பான். காடு மேடெல்லாம் தவிடு பொடி.)
கண்டு எடுத்தவன் கொடுப்பானா?
- (கொடான்.)
கண்டு எடுத்தானாம், ஒரு சுண்டு முத்தை.
கண்டு கழித்ததைக் கொண்டு குலாவினான்.
கண்டு செத்த பிணமானால் சுடுகாட்டுக்கு வழி தெரியும். 6720
- (சுடுகாட்டில் எரியும்.)
கண்டு நூல் சிடுக்கெடுத்தாச்சு: வண்டி நூல் இருக்கிறது.
கண்டு பேசக் காரியம் இருக்கிறது; முகத்தில் விழிக்க வெட்கமாய் இருக்கிறது.
கண்டும் காணவில்லை, கேட்டும் கேட்கவில்லை என்று இருக்க வேண்டும்.