8
தமிழ்ப் பழமொழிகள்
செட்டுக்கு ஒரு தட்டு; தேவடியாளுக்கு ஒரு மெட்டு.
செட்டும் கட்டுமாக வாழ்ந்தான்.
செடி இல்லாத குடி போல.
செடி கண்டு பேளாதான் வாழ்க்கை தடி கொன்ட நாயோடு ஒக்கும்.
செடியில் இருக்கிற ஓணானை மடியில் கட்டிக் கொண்டு குடைகிறது குடைகிறது என்றாள். 11285
செடியில் வணங்காதது மரத்தில் வணங்குமா?
செடியை வைத்துக் கொண்டு விலை கூறலாமா?
செண்ணூருக்குப் போகிறேன்; செம்மை உண்டா என்ற கதை.
செத்த அன்று வா என்றால் பத்தன்று வருவான்.
- (என்று சொன்னால் பத்தாம் நாள் வருவான்.)
செத்த ஆட்டுக்குக் கண் பெரிது; தாய் இல்லாப் பிள்ளைக்கு வயிறு பெரிது. 11290
செத்த ஆடு காற் பணம்; சுமை கூலி முக்காற் பணம்.
செத்த இடத்தில் புல் முளைத்துப் போகும்.
செத்தது செத்தாயே, செட்டி குளத்தில் விழுந்து சாகலாமா?
செத்த நாய் ஊதினாற் போல.
செத்த நாய் செருப்பைக் கடித்தது போல, 11295
செத்த நாய் திரும்பக் கடிக்காது.
- (திருப்பி.)
செத்த நாயில் உண்ணி கழன்றது போல.
செத்த நாயை இழுத்து எறிவது போல.
செத்த பாம்பு வருகிறதே அத்தை, நான் மாட்டேன் என்றதைப் போல.
செத்த பாம்பை அடிப்பது எளிது. 11300
செத்த பாம்பை ஆட்டுகிறான்.
செத்த பாம்பை ஆட்டுவாளாம் வித்தைக்காரப் பெண் பிள்ளை.
- (வித்தைக்காரன் மனைவி.)
செத்த பாம்பை எட்ட நின்று அடிப்பான், சீனத்து அதிகாரி.
செத்த பாம்பை எட்டித் தள்ளி நின்று அடிக்கும் தீரன்.
செத்த பிணத்திற் கடை, உற்றார்க்கு உதவாதவன். 11305
செத்த பிணத்துக்கு அருகே நாளைச் சாகும் பிணம் அழுகிறது.
- (இனிச் சாகும்). .
செத்த பிணத்துக்கு இனிச் சாகும் பிணம் அழுகிறது.
செத்த பிணத்துக் கண் ஏன்? சிவசிவ ஆண்டிக்குப் பெண் ஏன்?