பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/117

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

115



நல்லவன் ஒருவன் நடுவே நின்றால் அறாத வழக்கும் அறும்.

(ஒருவன் நடுவே நிற்... அற்றுப்போகும்.)

நல்லவனுக்கு அடையாளம் சொல்லாமற் போவது.

நல்லவனுக்கு ஒரு சொல்; நல்ல மாட்டுக்கு ஓர் அடி.

நல்லவனுக்குக் காலம் இல்லை.

நல்லவனுக்கு நாடு எங்கும் உறவு. 13755


நல்லவனுக்கு நாலு இடத்தில் மயிர்; போக்கிரிக்குப் பொச்சு வாயெல்லாம் மயிர்.

நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் நாட்டும் வேண்டாம்; சீட்டும் வேண்டாம்.

நல்ல வார்த்தை சொல்லி நாடியைத் தாங்குகிறான்.

(தாக்குகிறான்.)

நல்ல வார்த்தை சொன்னால் பொல்லாப்பு வராது.

நல்ல வீடு என்று பிச்சைக்கு வந்தேன்; கரியை வழித்துக் கன்னத்தில் தடவினார்கள். 13760


நல்ல வேலைக்காரன் ஆற்றோடே போகிறான்.

நல்ல வேளை முளைக்கிற இடத்தில் நாய் வேளையும்முளைக்கிறது.

நல்ல வேளையிலே ஞாயிற்றுக் கிழமையிலே.

நல்லறம் உள்ளது இல்லறம்.

நல்லறம் செய்வது, செய்யாது கேள். 13765

(கேள்-உறவினர்.)


நல்லாயிருந்தது தாதரே, பல்லை இளித்துக்கொண்டு பாடினது.

நல்லாக் கள்ளி விழித்தாற் போல.

நல்லார் ஒருவர்க்குப் பெய்யும் மழை எல்லார்க்கும் ஆம்.

(பெய்யும்.)

நல்லார்க்கு நாக்கில் உரை; பொன்னுக்குக் கல்லில் உரை.

நல்லார் கையில் நாகம் அகப்பட்டாலும் கொல்லார். 13770


நல்லார் சங்காத்தம் நல்ல மண்ணில் விழுந்த நீர்போல உதவும்.

நல்லார் நடக்கை தீயோர்க்குத் திகில்.

நல்லார் பொல்லாரை நடத்தையால் அறியலாம்.

நல்லாருக்குப் பெய்த மழை எல்லாருக்கும் ஆம்.

நல்லாரும் நல்ல பாம்பைப் போலத் தங்கள் வலிமையை அடக்கி மறைத்திருப்பார் சில வேளை. 13775


நல்லாரைக் கண்டால் நாய் போல; பொல்லாரைக் கண்டால் பூனை போல.

நல்லாரை நாவில் உரை; பொன்னைக் கல்லில் உரை.