பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/133

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

தமிழ்ப் பழமொழிகள்



நாய் வாழ்ந்தால் என்ன? பூனை தாலி அறுத்தால் என்ன?

நாய் விற்ற காசு குரைக்குமா? மீன் விற்ற காசு நாறுமா?

(+ நாரத் தேங்காய் விற்ற காசு கசக்குமா? வேப்பெண்ணெய் விற்ற காசு கசக்குமா?)

நாய் விற்ற துட்டைக் குரைத்தா காண்பிக்கிறது?

நாய் வீட்டைக் காக்கும்; புலி காட்டைக் காக்கும்.

நாய் வீட்டைக் காக்கும்; பூதம் பணத்தைக் காக்கும். 14220


நாய் வீட்டைக் காக்கும்; பூனை அடுப்படியைக் காக்கும்.

நாய் வீட்டைக் காக்கும்; பெருச்சாளி வீட்டைக் கெடுக்கும்.

நாய் வீட்டைச் சுற்றும்; நோய் உடலைச் சுற்றும்.

நாய் வேட்டை ஆடும்; குதிரை ஓட்டம் ஓடும்.

நாய் வேண்டும் என்றால் நரியைக் கொண்டு வருகிறான். 14225


நாய் வேதம் படித்தது போல.

நாய் வேஷம் போட்டால் குரைக்க வேண்டும்; பேய் வேஷம் போட்டால் ஆடவேண்டும்.

நாய் வேஷம் போட்டால் குரைத்துத்தான் ஆகவேண்டும்.

நாயகன் பட்சம் ஆயிரம் லட்சம்.

நாயம் கேட்டுக் கொண்டா காயம் உரைக்கிறார்கள்; அம்மியைக் கேட்டுக் கொண்டா மிளகாய் அரைக்கிறார்கள்? 14230


நாயன் இல்லாத நங்கை இருந்தென்ன போயென்ன?

நாயாகக் கத்திப் பேயாகப் பறந்தாலும் முடியாது.

நாயா சிங்கத்துக்கு நற்பட்டம் கட்டுகிறது?

நாயாடி மக்களோடு போய் ஆட வேண்டாம்.

நாயாய்ப் பிறந்தாலும் நல்ல நேரத்தில் பிறக்க வேண்டும். 14235


நாயால் ஆகுமா கொக்குப் பிடிக்க?

நாயிடம் தேன் இருக்கிறது; நக்கவா, துக்கவா, எதுக்கு ஆகும்?

நாயின் அவசரம் வாலுக்குத்தான் தெரியும்.

நாயின் கழுத்தில் நவரத்தினம் கட்டினாலும் நாய்க்குத் தெரியுமா அதன் மகிமை?

நாயின் காதில் தேன் அடை வைத்தது போல. 14240


நாயின் கோபத்தைப் பற்றிப் பூனையைக் கேட்டால் தெரியும்.

நாயின் நிழல் போல வாழ் நாள், கடிகம் பால் கழிவது போல.

நாயின் பின்னோடு நாலைந்து; பன்றியின் பின்னோடு பத்தெட்டு.

நாயின் புண்ணை நாய் கக்கும்.