பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/139

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138

தமிழ்ப் பழமொழிகள்




நாலு பிள்ளையும் நல்ல பிள்ளையானால் மேலும் பிள்ளை பெறுவானேன்?

நாலு பேர் கூடினது சபை.

நாலு பேர் போன வழி.

(இரு பொருள்.)

நாலு பேர் போன வழியில் நாமும் போக வேண்டும். 14375


நாலு பேர் வாக்குத் தெய்வ வாக்கு.

நாலு பேர் வாழ நடுவிலே நாம் வாழ.

நாலு பேருக்குச் சொல்லி மனசிலே போட்டு வைக்கிறவன்.

நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி; ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி.

நாலும் கிடக்க நடுவிலே நாத்தனார் தலையைச் சிரைத்தாளாம். 14380


நாலு மாதம் வரையில் நாய்கூடப் பிள்ளையை வளர்க்கும்.

நாலு முழத்தில் நடுவில் ஒரு முழம்.

நாலு வீட்டில் கல்யாணம்; நாய்க்கு நாய் தொங்கோட்டம்.

நாலு வீட்டில் நக்கிக் குடிக்கிற நாய்க்கு ஏன் இந்த வாய்?

நாலு வீட்டுச் செல்ல நாய் நடுத் தெருவில் அலைகிறது. 14385


நாலு வீடு ஆடுது; ஒரு வீடு ஆடுது.

நாலு வேதமும் தெரியும்; ஆறு சாஸ்திரமும் தெரியும்; வாய் மட்டும் ஊமை.

நாவல் பழுத்தால் நாடு செழிக்கும்.

நாவலும் பாவலும் ரத்த புஷ்டிக்கு.

நாவாய் கவிழ்த்த நாய்கன் போல. 14390


நாவிதன் செய்தி அறிந்து குடுமியைப் பத்திரப் படுத்தினானாம்.

நாவில் பிறக்கும் நன்மையும் தீமையும்.

நாவு அசைய நாடு அசையும்.

நாவுக்கு இசைந்தால் பாவுக்கு இசையும்.

நாவுக்கு எலும்பு இல்லை; எப்படிப் புரண்டாலும் புரளும். 14395


நாவை அடக்கி ஆளாவிட்டால் அது தன்னையே ஆளும்.

நாவைச் சுற்றிப் பிடிக்கிற தாரத்துக்கு நாள் கேட்டானாம் கிணறு வெட்ட.

(நாள் பார்த்தானாம்.)

நாழி அரிசிச் சாதம் சாப்பிட்டாலும் நாய் நாலு வீட்டில் நக்கித் தான் தின்னும்.