140
தமிழ்ப் பழமொழிகள்
நாளும் கிழமையும் நலிந்தோர்க்கு இல்லை.
- (நாளும் கோளும், வெற்றிவேற்கை)
நாளும் கோளும் நன்மை செய்யும். 14425
நாளை என்பது இல்லை என்பதற்கு அடையாளம்.
- (ஏமாற்றுவதற்கு.)
நாளை என்பது நமன் நாள் ஆகும்.
நாளை என்பதைவிட இல்லை என்பவர் நல்லவர்.
நாளைக்குக் கல்யாணம்; பிடியடி பாக்கு வெற்றிலையை.
நாளைக்குத் தாலி கட்டுகிறேன்; கழுத்தே சுகமாய் இரு. 14430
நாளைக்குத் தின்கிற பலாப்பழத்திலும் இன்றைக்குத் தின்கிறகளாப் பழம் நல்லது.
நாளைக்குத் தெரியும் நாச்சியாத்தாள் மாரடி.
- (நாளைத் தெரியும்.)
நாளைக்கும் சீர் நடக்கத்தான் போகிறது; இன்றைக்கும் சீர் இருக்கத்தான் போகிறது.
நாளைக் குறைத்தால் தன்னைக் குறைக்கும்.
நாளை மடக்கினால் நம்மை மடக்கும். 14435
நாளை வரும் நெற்குவியலிலும் இன்று உள்ள படி விதை பெரிதென்று விழுங்கலாமா?
நாளை வரும் பலாக்காயை விட இன்று வரும் களாக்காய் நல்லது.
- (தின்கிற பழத்தைவிட)
நாற்கலக் கூழுக்கு நானே அதிகாரி.
நாற்பதுக்குமேல் சென்றால் நாய்க் குணம்.
- (நாய்க்குச் சரி.)
நாற்பதுக்குமேல் நாய்க்குணம்; அம்பதுக்கு ஆட்டம்; அறுபதுக்கு ஓட்டம். 14440
நாற்பது வந்தால் நரை வரும்.
நாற்றக் கூழுக்கு அழுகல் மாங்காய்.
நாற்று முப்பது சாற்று முப்பது.
நாறல் சடலம் நலம் இல்லா மட்பாண்டம்.
நாறல் சாணியை மிதிப்பானேன்? நல்ல தண்ணீர் வார்த்துக் கழுவு வானேன்? 14445
- (நாறல் மலத்தை.)
நாறல் சோற்றுக்குப் பதம் பார்க்கிறது ஏன்?
நாறல் தூற்றல் நரிக்குக் கொண்டாட்டம்.