146
தமிழ்ப் பழமொழிகள்
நிலைவிட்டால் நீச்சல்.
நிழல் அருமை வெயிலில் தெரியும்.
நிழல் கடக்கப் பாயலாமா?
நிழல் நல்லது; முசிறு ஒட்டாது.
- (கெட்டது பொல்லாதது.)
நிழலின் பெருமை வெயிலில் போனால் தெரியும். 14555
நிழலுக்கு இடம் கொடுத்தாலும் நீருக்கு இடம் கொடாதே.
நிழலுக்கும் கனவுக்கும் ஒத்தது ஆக்கை.
நிற்க நிழல் இல்லை; சாயச் சுவர் இல்லை.
- (உட்காரச் சுவர் இல்லை.)
நிற்க ஜீவன் இல்லாமல் போனாலும் பேர் நிரப்புக் கட்சி.
நிறம் சுட்டாற் போம்; குணம் கொன்றாற் போம். 14560
நிறை குடத்தில் பிறந்து நிறை குடத்தில் புகுந்தவன்.
நிறைகுடம் தளும்பாது.
நிறைகுடம் நிற்கும்; குறை குடம் கூத்தாடும்.
நிறைகுடம் நீர் தளும்பல் இல்.
- (பழமொழி நானூறு.)
நிறைந்த ஆற்றிலே பெருங்காயம் கரைத்தது போல. 14565
நிறைந்த சால் நீர் கொள்ளுமா?
நிறை பொதியிலே கழுதை வாய். வைத்தாற் போல்.
நிறையக் குளித்தால் கூதல் இல்லை.
நிறையக் குறுணி வேண்டாம்; தலை தடவிக் குறுணி கொடு.
நிறையக் கேள்; குறையப் பேசு. 14570
நிறைய முழுகினால் குளிர் இல்லை.
நின்ற இடத்தில் நெடுநேரம் போனால் நின்ற மரமே நெடு மரம்.
- (போனாலும்.)
நின்ற மரமே நெடுமரம்.
நின்ற வரைக்கும் நெடுஞ்சுவர்; விழுந்தாற் குட்டிச் சுவர்
- (நின்றால்)
நின்ற வெள்ளத்தையும் வந்த வெள்ளம் கொண்டு போயிற்று. 14575
நின்றால் நெடு மரம்; விழுந்தால் பன மரம்.
நின்றாற்போல் விழுந்தால் தலை உடையும்.
நின்று தின்றால் குன்றும் மாளும்.
- (கரையும், குறையும்.)