பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/147

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146

தமிழ்ப் பழமொழிகள்



நிலைவிட்டால் நீச்சல்.

நிழல் அருமை வெயிலில் தெரியும்.

நிழல் கடக்கப் பாயலாமா?

நிழல் நல்லது; முசிறு ஒட்டாது.

(கெட்டது பொல்லாதது.)

நிழலின் பெருமை வெயிலில் போனால் தெரியும். 14555


நிழலுக்கு இடம் கொடுத்தாலும் நீருக்கு இடம் கொடாதே.

நிழலுக்கும் கனவுக்கும் ஒத்தது ஆக்கை.

நிற்க நிழல் இல்லை; சாயச் சுவர் இல்லை.

(உட்காரச் சுவர் இல்லை.)

நிற்க ஜீவன் இல்லாமல் போனாலும் பேர் நிரப்புக் கட்சி.

நிறம் சுட்டாற் போம்; குணம் கொன்றாற் போம். 14560


நிறை குடத்தில் பிறந்து நிறை குடத்தில் புகுந்தவன்.

நிறைகுடம் தளும்பாது.

நிறைகுடம் நிற்கும்; குறை குடம் கூத்தாடும்.

நிறைகுடம் நீர் தளும்பல் இல்.

(பழமொழி நானூறு.)

நிறைந்த ஆற்றிலே பெருங்காயம் கரைத்தது போல. 14565


நிறைந்த சால் நீர் கொள்ளுமா?

நிறை பொதியிலே கழுதை வாய். வைத்தாற் போல்.

நிறையக் குளித்தால் கூதல் இல்லை.

நிறையக் குறுணி வேண்டாம்; தலை தடவிக் குறுணி கொடு.

நிறையக் கேள்; குறையப் பேசு. 14570


நிறைய முழுகினால் குளிர் இல்லை.

நின்ற இடத்தில் நெடுநேரம் போனால் நின்ற மரமே நெடு மரம்.

(போனாலும்.)

நின்ற மரமே நெடுமரம்.

நின்ற வரைக்கும் நெடுஞ்சுவர்; விழுந்தாற் குட்டிச் சுவர்

(நின்றால்)

நின்ற வெள்ளத்தையும் வந்த வெள்ளம் கொண்டு போயிற்று. 14575


நின்றால் நெடு மரம்; விழுந்தால் பன மரம்.

நின்றாற்போல் விழுந்தால் தலை உடையும்.

நின்று தின்றால் குன்றும் மாளும்.

(கரையும், குறையும்.)